Tuesday, October 20, 2009

மீண்டும் நரகாசுரன்....!


மீண்டும் வந்தான் நரகாசுரன்.




ஆண்டு முழுவதும்

அரும்பாடுபட்டுச் சம்பாதித்த

பணத்தையெல்லாம் வெடியாகக்

கொளுத்திக் கரித்தான் புகைத்தான்.



,



கூரை வேய்ந்திருந்த

அந்த ஏழை வீட்டின்

ஓலைக் குடிசையையும்

வெடியால் கொளுத்திச்

சாம்பலாக்கினான்.



,



வெடி எனும் ஆயுதம் கொண்டு

பலரைக் காயப்படுத்தினான்.

சிலரைக் கொன்றான்.
,

மற்றோரெல்லாம் சீக்கிரம்

இறந்திடவே புகையால்

சுற்றுச் சூழலை நாசப்படுத்தி

மரண வலை விரித்தான்.



,



வீதிகளையெல்லாம்

குப்பைகளாக்கித் தோட்டிகளுக்கு

வேலை கொடுத்தான்.


,



கடும் சப்தவெடிகளை

இரவில் வெடித்து எங்களின்

இரவுத் தூக்கத்தைக்

கெடுத்தான்- அவன் மகிழ்ந்தான்.




,



மீண்டும் அடுத்த ஆண்டு வருவேன்

என எச்சரித்துச் சென்றான்.