Sunday, August 16, 2009

HOW TO ACT LIKE BUZY IN THE OFFICE?



(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?
திஸ் டிப்ஸ் ஒன்லி ஃபார் வெட்டி ஆஃபிஸர்ஸ்.... :-)

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.
அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?
WORK WHILE YOU WORK & PLAY WHILE YOU PLAY.
DON'T WORK WHILE YOU PLAY & DON'T PLAY WHILE YOU WORK.
ALL THE BEST TO BECOME AS BEST EMPLOYEE.
மேலே கூறிய எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்த உங்களுக்கு, சம்பளம் வாங்கும் சமயம் உங்கள் மனசாட்சி கொஞ்சம் உறுத்தினால், உண்மைலேயே நீங்கள் நல்லவர் தான். ஹி.. ஹி...!

Saturday, August 15, 2009

SWINE FLU - பன்றி காய்ச்சல்

கேள்விகளும் & குழப்பங்களும்

Q: Can I get flu virus by eating food products?

Q: How many swine flu viruses are there?

Q: Why is the new H1N1 virus sometimes called swine flu?

Q: What precautions should you take at home?

Q: Will it help to wear a mask?

Q: Can it be prevented?

Q: How does it spread?

Q: Who is at risk?

Q: What is the treatment?

Q: What should you do immediately?

Q: What are the symptoms?

Q: What precautions should you take at schools?

Q: Is it safe to travel?

மேற்கண்ட கேள்விகளுக்கு கீழ்க்கண்ட தளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் பன்றி காய்ச்சல் பற்றிய உடனடி தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.


இந்த தளத்தில் பன்றி காய்ச்சல் பற்றிய தகவல்கள் நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் செய்யப்படுகின்றன. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனே தீர்த்துக்கொள்ளலாம்.

நோயற்ற வாழ்வே

குறைவற்ற செல்வம்.

HEALTH IS WEALTH


Wednesday, August 12, 2009

JAI HO..! मा तुजे सलाम...!!


On 15 August 1947, India attained freedom from the British Rule. Every year, August 15 is celebrated as the Independence Day in India. This national festival is celebrated with great enthusiasm all over the country.The Independence Day of any country is a moment of pride and glory. On this special occasion, rich tributes are paid to the freedom fighters who sacrificed their lives and fought to free their motherland from the clutches of the oppressors - British who ruled the country.
At the stroke of midnight, as India moved into August 15, 1947, Jawaharlal Nehru, India's first Prime Minister, read out the famous speech proclaiming India's independence.The moment ended three centuries of British colonial rule. The land was no longer the summer retreat of British sahibs who fancied spices, shikar, elephants and snake-charmers.Independence was also the end of nearly a century of struggle for freedom, battles, betrayals and sacrifices. It also created a situation where we were responsible for ourselves.But it wasn't a period of unqualified joy. For a lot of people, in spite of a new era promised by independence, partition was a painful reality and so was the bloodshed that accompanied it.
The Prime Minister's speech at the Red Fort in Delhi is a major highlight. Patriotic presentations by school children add colors to the celebrations. Delhi’s skyline gets dotted with thousands of kites taking to the sky this day. Similar programmes are held at all the State capitals also.The preparations begin a month in advance. Roads are decorated with flags and buntings. Buildings of national importance are illuminated.

Politics has undergone a personality change from fiery idealism to a pragmatic cynicism. Karma drives the nation on its way forward, and population has crossed the billion mark.But, come August 15, and the people put their troubles behind them for a while, as they stand up as a nation for the National Anthem. Along with the soaring cadences of the anthem, the hopes and dreams for a better tomorrow are renewed in political speeches and replays of the deeds of those who earned us our freedom.

Independence Day is an occasion to rejoice in our freedom and to pay collective homage to all those people who sacrificed their lives to the cause. But it is more than that. It also marks the coming together of more than 400 princely states into one nation - India. This was probably our biggest diplomatic success. Each year, August 15 gives us the reason to celebrate all this, and do much more - it is a time to contemplate what we have and how we achieved it.Though India had no dearth of religious and community festivals, there was, till Independence, no true national festival that the whole country could partake of. Independence Day, beginning as a day to commemorate the greatest moment in Indian history, has now come to signify a feeling of nationalism, solidarity and celebration.Independence Day remained the sole national festival till India declared itself a republic in 1950. On January 26, 1950, Republic Day became the second Indian national holiday.
BE PROUD TO BE AN INDIAN (whoever & wherever YOU are) !!
JAI BHARAT मा तुजे सलाम

BOOKS LIBRARY

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே நாள் தோறும் நலிந்து வருகிறது. பிறர் சொல்ல நாம் கேட்டுப் பெறும் அறிவை விட, புத்தகங்கள் படித்து அல்லது வாசித்து பெறும் பெரும் அறிவு தான் நினைவில் நீடிக்கும். கீழ்க்கண்ட இணையதள அலமாரிகளில் மலிந்து, புதைந்து கிடக்கும் அரிய புத்தக அறிவை தேடி எடுக்க சொடுக்குங்கள் ஒன்றன்பின் ஒன்றாக.

கற்றது கால்குலேட்டர் அளவு...

கல்லாதது கம்யூட்டர் அளவு. :-)

(அவ்வையின் பழமொழியுலிருந்து அடியேனின் புதுமொழி :-)

புறப்படுவோம்... புத்தக / புத்தி புதையலை நோக்கி....!

"BOOKS without the knowledge of life are useless."

-Samuel Johnson.

"The proper study of mankind is BOOKS."

-Aldous Huxley.

"BOOKS are the blessed chloroform of the mind."

-Robert W. Chambers

"Book your knowledge thro' BOOKS"

-Ahamed Anver

Tuesday, August 11, 2009

BILL GATES :- சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி

வெற்றியாளர்களில் இரண்டு வகை... உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை... பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் 'பாட'த்தைத் தொடங்கிவிட்டார்.

கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் 'லேக்சைட் (Lake Side) பள்ளி'யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான 'பேசிக்'கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், 'இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। 'அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை' என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.

பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு'க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடம் 'டேட்டா என்ட்ரி' வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை. துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, 'டிராஃப்- ஓ -டேட்டா' (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, 'இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்' என்று அமெரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.

இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் 'பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்' இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், 'உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது' என்று அள்ளிவிட்டனர். உண்மையில் அவர்களிடம் 'அல்டெய்ர்' ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.'எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்' என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் உருவானது.இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்.

இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் 'பேசிக்' புரோகிராமோடு நிற்காமல் 'ஃபோர்ட்ரான்', 'கோபால்' ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார். அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது. அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்... அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்... இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை. சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்-துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.

இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை! இத்தனை குறுகிய காலத்தில் 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த 'க்யூடாஸ்' (QDOS) என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கி-னார்। அதில் மராமத்து வேலைகள் செய்து, தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி 'டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்' (DOS) என்ற பெயரில் ஐ.பி.எம். (IBM) கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். 'பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி' என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி 'ஐ.பி.எம்'- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார். உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது! ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம். என்னதான் 'ஐ.பி.எம்.' நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்-கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் 'ஐ.பி.எம்.' கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.

கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய 'டாஸ் சிஸ்ட'த்தில் 'மைக்ரோசாஃப்ட்' இருந்த நேரத்தில் 'மவுஸை' வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை 'க்ளிக்' செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான 'ஆப்பிள்'. 1984-ல் அதன் 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டர் 'மவுஸ்' உடன் வெளிவந்தது. 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'எம்.எஸ்.வேர்ட்'டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது. ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து 'விண்டோஸ்' என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை தயாரித்ததாக 'மைக்ரோசாஃப்ட்' மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது.

எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட 'மைக்ரோசாஃப்ட்'டில் இருந்து, 1990-ல் 'விண்டோஸ்- 3।0' வெளியானது. அதைப் பிரபலப்படுத்த 'மைக்ரோசாஃப்ட்' தயாரித்து அளித்த 'எக்ஸெல்', 'வேர்ட்', 'பவர் பாயின்ட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. 'ஆப்பிள்' கம்ப்யூட்டரில் கூட 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' வெற்றிகரமாக இயங்கியது. 'விண்டோஸ்- 3.0' நல்ல வெற்றி. 1995-ல் வந்த 'விண்டோஸ் -95' அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். 'விண்டோஸி'ன் நதிமூலம் 'ஆப்பிள்'தான் என்பது மறந்தே போயிற்று. இப்படி 'ஆபரேட்டிங் சிஸ்டம்' பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள். அதனால் என்ன... பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே... உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்... இலவசம்! 'விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட'த்தோடு 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை' இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா... கொஞ்ச நாளில் 'நெட்ஸ்கேப்' பின்னுக்குத் தள்ளப்பட்டது.

'விண்டோஸ்' என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று 'ஆபரேட்டிங் சிஸ்டம்' தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்-னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத்-தான் பேசி-யது. பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்-பட்டது. இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது... பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்... 'உழைக்கத் தயங்காதே... ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே...' இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்-கிறார் பில்கேட்ஸ்! 2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் 'சேர்மன்' என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு.......!!

நன்றி : விகடன் குழுமம்.

BILL GATES : A LIVING LEGEND & REAL ROLE-MODEL FOR ALL 'IT' LOVERS.

பில்கேட்ஸ் ஒரு சகாப்தம்.

Monday, August 10, 2009

E-GREETING CARDS FOR HOLY RAMADAN

(click on the cards to get full view)

இரத்தத்தின் ரத்தமே.!! BLOOD BROTHERS !!


www.friendstosupport.org/index.aspx


இந்தியாவின் இரத்த வங்கி மற்றும் இரத்தம் கொடுப்போர் & பெறுவோர் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய ஒரு அற்புதமான இணையத் தளம். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் ஊர்வாரியாக குறிப்பிட்ட அல்லது தேவைப்படும் இரத்த வகையை கொடுப்போர் & பெறுவோர் பற்றிய ஒரு டேட்டாபேஸ்.

இந்தியாவின் இந்த இனிய / இணையதளத்தில் தங்களை இணைத்து இரத்தசேவைபுரியும் அனைவருக்கும் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் இறைவன் நல்லருள் புரிவாணாக....!

For further queries, feel free to contact :

Shareef
Hyderabad
shareef@friendstosupport.org

Ramesh Susarla
Guntur
susarla13@friendstosupport.org

Vijay
Hyderabad
vijay.pothireddy@friendstosupport.org

Karthik Pavan
Hyderabad
karthik@friendstosupport.org

Naresh. M
Hyderabad
naresh@friendstosupport.org

Rohit KN Shenoy
Bangalore
rohit@friendstosupport.org

Chandan. G
Bangalore
chandan@friendstosupport.org

Naveen
U. S. A
naveen.evuri@friendstosupport.org

Koteswara Rao
U. S. A
koteswararao.s@friendstosupport.org

Phani Kethamakka
U. S. A
phani.kethamakka@friendstosupport.org

Murali Krishna
Singapore
muralikrishna@friendstosupport.org

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

KINDLY SPREAD IT OUT ABOUT THIS SOCIAL SERVICES TO ALL YOUR CIRCLES. IF YOU SAVE SOMEONE'S LIFE THRO' SOMEONE'S EFFORT, SURELY YOU WILL BE REWARDED BY GOD.
எவர் ஓர் அணு அளவு நன்மை செய்தாலும் அதன் பலனை மறுமையில் பெறுவார். எவர் ஓர் அணு அளவு தீமை செய்தாலும் அதன் பலனை மறுமையில் பெறுவார். - அல்குர்ஆன் (99:7 & 8)
எவர் ஒரு உயிரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார் - அல்குர்ஆன் (5:32)

Sunday, August 09, 2009

GOOGLE - The Great





























கூகுலின் புதிய லோகோக்கள்
இன்று எத்தனை பேர் கூகுளாரின் லோகோவை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அமேரிக்காவில் வாழும் தம்மாத்துண்டு குழந்தைகளிலிருந்து 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வரை கடந்த இரண்டு மாதங்களாக அனைவருக்கும் ரவுண்டு கட்டி நேஷனல் டிசைன் மியுசியத்துடன் இணைந்து ஒரு அற்புதமான போட்டி நடத்தி முடித்துள்ளது. அதாவது "நான் விரும்பும் உலகம்" (WHAT I WISH FOR THE WORLD) என்ற தலைப்பில் எல்லா குழந்தைகளும் அவரவர் விருப்பம் போல கூகுள் லோகோவை வடிவமைக்க வேண்டியது. தேர்ந்தெடுக்கப்படும் லோகோ ஒரு நாள் முழுதும் கூகுள்.காமை அலங்கரிக்கும். எத்தனை சிறப்பான விஷயம்? கூகுளின் லோகோவையும் அவர்கள் அடிக்கடி அதன் முகம், நிறம் மாற்றும் உக்திக்கே பலர் அடிமை. இதில் இப்படி ஒரு போட்டியை எல்லா குழந்தைகளுக்கும், பள்ளிகளுக்கும் வைத்து இத்தனை பொறுப்புடன் திறமைகளை வெளிக்கொணரும் பாங்கை என்ன சொல்வதென்று புரியவில்லை.
இந்தப் போட்டியில் வெல்லுபவருக்கான பரிசுகளைப் பாருங்கள்.

1. முதல் பரிசு பெறும் குழந்தைக்கு $15,000 படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் பரிசு

2. கூகுள் அலுவலகத்திற்குள் ஒரு பயணம்.

3. ஒரு லேப்டாப்.

4. வென்ற லோகோவைக் கொண்ட ஒரு டீஸர்ட்.

5. இதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையின் பள்ளிக்கு கம்ப்யுட்டர் லேப் வளர்ச்சிக்காக $25,000 பரிசு.
தானும் ஜெயிக்கணும்.... மற்றவர்களையும் பாராட்டணும். இது தான் கூகுலின் வெற்றிச் சூத்திரம்.

மிச்சத்தை உங்கள் திரையில் காண்க (இங்கே சொடுக்குக).
இந்த இணைப்பில் வலது புறம் உள்ள வீடியோ தொகுப்பை காணுங்கள்.

RAMADAN CALENDAR & PRAYER TIMINGS

(click on the image for full view)

The above timetable showing the prayer time for the whole holy month of Ramadan in Abu Dhabi - UAE.
For other Arab cities, please click here
RAMADAN KAREEM
ரமலான் வாழ்த்துக்கள்

அறிவோம் அறிவியல்


ஓசோன் படலம் வாயு மண்டலத்தின் உயரமான அடுக்குகளில் காணப்படுகிறது. இது சூரியனின் கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. அதே போல தரைப்பகுதியிலும் ஓசோன் உள்ளது. இது தாவரங்கள் விலங்குகளை பாதிக்கிறது. இதுபற்றி விக்டோரியா விட்டிக் என்ற விஞ்ஞானி ஆராய்ச்சி செய்தார். அவர் கூறியதாவது :-பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி, எரிபொருட்களை பயன்படுத்துவதனால் ஓசோனின் அளவு அதிகரிக்கிறது. வாயு மண்டலத்தில் ஆக்சிஜன் உள்ளதைப் போல ஓசோன் வாயுவும் உண்டு. தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த அளவைவிட தற்பொழுது ஓசோன் 4-மடங்கு அதிகரித்து விட்டது.அதனால் மரங்களின் வளர்ச்சி கி.பி.1800களில் இருந் ததை விட தற்போது 7-சதவிதம் குறைந்துள்ளது. இது 2100-வாக்கில் இன்னும் 10-சதவிதம் அதிகரித்து 17-சதவீதம் ஆகிவிடும். இது மரங்களில் கார்பன் தன்மயமாவதை தடுத்து மரங்களின் வளர்ச்சி மற்றும் அதன் பொருண்மையை குறைக்கும். இது ஊசி இலை மரங்களைவிட படர்ந்த இலையுடைய மரங்களை எளிதில் தாக்குகிறது. மரங்களின் வேர்ப்பகுதியை பாதிப்பதன் மூலம் புயலால் எளிதில் சேதப்படுத்தப்படுகிறது.


மரங்களை வளர்ப்போம் : மண்ணைக் காப்போம்.



ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின் போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.
மனிதனாக இருப்போம் : மனிதநேயத்தை வளர்ப்போம்.
செல்போன்களை பயன் படுத்துவதால் புற்று நோய், நரம்ப தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. அவை நிரூ பிக்கப்படவில்லை என்று மாறுபட்ட தகவல்களும் வெளியாயின. இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க டாக்டர்கள் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் மொபைல் போன்களில் இருந்து வெளி யாகும் கதிர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த கதிர் வீச்சு நமது தூக்கத்தை பாதிக்கும். இதனால் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மூளையின் செல்களை இந்த கதிர்வீச்சு தூண்டி விடுவதால் மூளை விழிப்பு டன் செயல்படும். இதனால் ஆழ்ந்த தூக்கம் வராது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 35 ஆண்கள் மற்றும் 36 பெண்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது. இவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆடம்பரம் அத்தியாவசியம் ஆனாலும் அதனினும் அவசியம் ஆரோக்கியம்.

5 Compliments Every Woman Loves To Hear From Man

Words of appreciation spoken directly to your romantic partner go far in paving the way to a happy, healthy relationship. What is sometimes too easily forgotten: disagreements among couples (from trifling to serious) can nearly always be overcome with a few words of gratitude from a partner (a.k.a., a healthy dose of authentic compliments).
These are the top five compliments every woman loves to hear. If you can't remember the words, remember the key principles: appreciation, support and acceptance. This is the triage to a strong, lasting and powerful romantic endeavor.
  • 1. You bring light to my life. Yes, we know this sounds like a bit much. But bear with us and let us make one point: relationships can go off course when one or both partners takes for granted the contributions the other makes to their lives. Saying this shows that a man understands and remembers that a women chooses to be with her man and opts to give her energy and time to him. Showing he appreciates that she shares her life with him is symphonic to a woman's ears. If the word light is a tad too over-the-top for you try replacing it with happiness, joy, sunshine—whichever word you can say with genuine meaning.
  • 2.You're Irreplaceable. This is a surefire way to light up your partner’s eyes. Saying these words (with full eye contact, of course) lets the special one in your life know that you know who she is as a person and that you value her as a unique individual. Why is this so effective? Think about when you break up with someone and part ways. One of the worst ramifications of the break-up is finding out, via Facebook update or chattering among friends, that you've been replaced by someone new. On the flip side, hearing from your current partner that you're valued for more than what you look like scores big, meaningful points.
  • 3. You are perfect just the way that you are. This one takes the gold star award for ability to make a woman’s day, week, month or even year (if, that is, whenever she gets miffed at you for something small she recalls you saying this to her). Ingrid Michaelson sang it best with her lyrics to the song "The Way that I Am." If you really want to make your partner's day, we suggest e-mailing this song or youtube video to the woman you love. Deep, lasting love is unconditional. Showing that you comprehend and embrace this idea will touch your partner way more than superficial comments such as, "Your earrings are cute."
  • 4. I love your (bright eyes, cute toes, toned arms, sleek legs, silky hair). We did not mean to give the impression above that we women do not like to hear you notice when we put extra effort into looking foxy for our man. But what’s key here is that what you say is genuine. Don’t just pick any random feature. Think about it. What is your partner’s best physical attribute and why do you like it? Telling your partner this will show her you pay attention to details, and to her.
  • 5. I am so proud of you. A big deal-breaker in any relationship can be supporting one another’s life goals or not. Paying attention to your partner’s current goals she is working hard to achieve endear her to you for life. Whether it is paying off her credit card debt, completing a class, putting in extra hours to earn a promotion or even trying to better balance her life, show your loving support for your women. Her heart will melt then and every time thereafter she remembers when you supported along the way to making things happen and brushing off when the chips are down.
=================
மேற்படித்தவற்றை மேற்படியிடம் மென்மையாக கூற தயக்கமா? என்ன செய்வது...? சில அழகிய பொய்களை கூறி அவள்களை சரிக்கட்டி வாழ்வை ஓட்ட வேண்டியுள்ளது.!! பொய்யை சொன்னாலும்... பொருத்தமா, பொறுப்பா, பொறுமையா, பக்குவமா சொல்லுங்க. ஏன் எனில், 'வாய்'மையே வெல்லும். ஹி.. ஹி...! :-) सत्यमेव जयते
=================

Wednesday, August 05, 2009

TOP TEN TIPS TO TRIUMPH @ INTERVIEWS..!!



Here are 10 of the most common mistakes people make on Job Interviews :

  • 1. Not taking the interview seriously:

Don't make the mistake of thinking the interview is just a formality. Even if all the preliminaries have gone well, don't be cavalier and start imagining how you'll start spending your new salary. The biggest error you can make is to assume that, because you've gotten this far, the job is in the bag.

  • 2. Dressing down:

How you present yourself during your initial meeting with a potential employer is very important, and your physical appearance can speak volumes to someone who is meeting you for the first time. Even if you know that the firm allows employees to wear jeans, don't sabotage yourself by showing up to the interview in casual clothing. Err on the side of conservative and show up in neat, professional clothing, preferably a business suit.

  • 3. Not showing why you're the best choice:

Be familiar with the job description of the position you're interviewing for so you can illustrate how your experience, abilities, and strengths are in line with the company's needs. Many potential employers want to know why they should hire you specifically. Make it clear to them.

  • 4. Being too modest:

Failing to talk yourself up during an interview is one of the most self-defeating mistakes you can make. This is not the time for humility, so sing your praises! Don't be afraid to talk up everything you've accomplished, whether in school or in previous companies. This is your time to shine.

  • 5. Talking too much:

Be careful not to talk over the interviewer. This meeting should be a two-way conversation, and many interviewees cover up their nervousness by blathering on. Sit calmly and listen carefully, answering questions thoughtfully.

  • 6. Focusing on the funds:

Don't start talking about money too soon into the interview. Focusing on your salary requirements and previous salary history right off the bat may cause you to reveal too much. While the topic of salary will certainly come up, follow the interviewer' s lead. He or she may be saving that topic for a later conversation.

  • 7. Trash talking:

Even if you hated your former boss or felt you were treated unfairly by your previous employer, a job interview is not the place to launch into a litany of complaints. Don't go there. If you were laid off or fired from a previous position, be prepared with an explanation that puts a positive spin on the circumstances.

  • 8. Failing to ask questions:

Your résumé/CV may be impressive on paper, but employers also appreciate a candidate who can ask several intelligent questions during an interview. Prepare at least 3 or 4 questions in advance to ask the interviewer. Interviews are an exchange of information, and not having questions to ask can reveal a lack of preparation.

  • 9. Lack of enthusiasm:

This is your first and sometimes only chance to showcase your personality. Don't walk in announcing how you're having a bad day. Be polite and upbeat. Show your enthusiasm for both the job and the opportunity to interview for it. And don't forget to thank the person at the end of the interview!

  • 10. Forgetting the follow-up:

Make sure to send a handwritten thank-you note or polite email to the interviewer expressing gratitude for his or her time and consideration. And while you don't want to start calling the company on a daily basis, a phone call checking in a week after the interview is perfectly acceptable.

=====================

All that hard work sending out resumes/CV has finally paid off and you've been called in for a face-to-face job interview.

This is an important step in your job search. It's also your only chance to make a lasting first impression. On the day of your interview, sweating palms and stomach butterflies are to be expected. But you can reduce your stress level by knowing some common mistakes that interviewees make when meeting with potential employers.

Click here http://ahamedanver.blogspot.com/2009/08/q-u-e-s-t-i-o-n-s.html to read out all frequently asked question during many interviews.


If you had lost your previous job due to the global economic crisis, it's somehow your chance to evaluate your skills & knowledge in order to improve yourself and to get better job than the earlier one. BE OPTIMISTIC.

TRUST IN GOD & HAVE CONFIDENT YOURSELF.

CONGRATULATIONS & GOOD LUCK

======================

1 2 3 4 5 6 7 8 9 - ONCE IN YOUR LIFE TIME

YEAR--------------- 2009
MONTH-------------8 (August)
DATE----------------7 (Friday)
SECONDS-----------56
MINUTES-----------34
HOURS--------------12



If you read it again from bottom to top, you will get

12:34:56 - 07/08/09
which will never happen again in your life time.

Also, the last or lost minutes will never back to your life.

TIME & TIDE never Stops....!

Tuesday, August 04, 2009

PICTURES AND MY COMMENTS


அருகில் அமர்ந்திருப்பவரின் அங்கலாய்ப்பு : -
"மவனே.... நீ இப்படி இருந்தால், நாட்டை மட்டும் அல்ல,
உன் வீட்டை கூட காக்க முடியாது டா."



உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் வேலை பறிபோய் விட்டது.
நாம் படித்த பட்டத்தால் என்ன பயன்? பறக்க விடுவோம் பட்டத்தை பட்டமாக.



ஷூட்டிங் ஸ்பாட். வச்ச குறி தப்பாது.
போட்டோகிராஃபேர் : "ஸ்மைல் ப்லீஸ் ஃபர்ஸ்ட்லி...."

துப்பாக்கி வீரர் : "ப்லீஸ்.... யூ ஸ்மைல் லாஸ்ட்லி..."




பாம்பு என்றால் படை நடுங்கும்.
பெண் என்றால்.....?
படை ஒடுங்கும் / ஒதுங்கும்.!!




தண்ணீர் குடிக்க வந்த, முதலைக்கண்ணீர் வடிக்கும் மாடு :
"கொலைகார பாவிகளா...?!
தாகம் தீர்க்க வந்த என் தேகம் வேணுமா உங்களுக்கு?!"



ட்ரைவர் நாயே....! லைசென்சை தானே காட்ட சொன்னேன்?
அதுக்கு ஏன் என்கிட்ட நாய் மாதிரி வள்வள்னு குரைய்ச்சி உன் மதிப்பை குலைக்கிறா?



உழைப்பாளிகளுக்கு ஓய்வு தேவை தான்.
மவனே.... நீ இங்கே ஓய்வு எடுத்தால், அப்புறம் நிரந்தர ஓய்வு தாண்டி...!?!





துள்ளுவதோ இளமை.
சீனக் காவலர் பயிற்சியில் இது வளமை.
தமிழக காவலர்களுக்கு இது இன்றியமையாமை.
தொப்பைக்கு குட்‌பை.

BE ALERT WHILE YOU CROSS ROADS

(Play this video with sound. This accident happend in Bangladesh's Big Bazaar railway station's open level crossing.)

சாலைகளை கடக்கும்போதும்

&

சேலைகளை கடக்கும்போதும்

மிகுந்த எச்சரிக்கை தேவை..!!

Monday, August 03, 2009

10 WAYS TO GREEN YOUR HOME & ENVIRONMENT

  • One Bright Idea

If you're going to do just one thing for the planet, make it the switch to compact fluorescent light bulbs (CFLs). Although they cost several times more upfront than regular incandescent light bulbs, they also last about 10 times longer, which means that for every CFL you screw in, you'll be saving eight incandescent light bulbs from landfill purgatory. Plus, you'll save some serious cash in the long run. Because CFLs use 75 percent less energy, swapping one incandescent bulb for a CFL reduces carbon dioxide by 500 pounds a year; replacing 17 has the equivalent effect of taking one car off the road for a year. Just remember to recycle spent bulbs responsibly - CFLs contain trace amounts of mercury, which although isn't enough to be hazardous to you, could pose a problem in landfills when mercury from multiple bulbs leaches into the ground.


  • Paper Nor Plastic

Eschew plastic bags by bringing your own reusable canvas totes the next time you're at the supermarket or store. Because petroleum-based plastic isn't biodegradable, it's certain to outlive you-by about a millennium or so. Each year, thousands of marine animals, including the endangered leatherback turtle, choke to death on plastic trash they mistake for snackable morsels. Our unholy love for plastic disposables has also bred a swirling vortex of plastic trash the size of Texas in the North Pacific Ocean-not surprising when you consider that Americans run through about 100 billion plastic bags annually, using up an estimated 12 million barrels of oil.

  • No Soliciting

Deforestation is responsible for 25 percent of all carbon emissions released into the atmosphere, through the burning and cutting of 34 million acres of trees annually. Save some virgin and old-growth forests by opting out of paper catalogs and browsing online, instead. Why did you think Al Gore invented the Internet? Shed those extra 41 pounds of junk mail the average American packs on each year by removing yourself from direct-mail mailing lists; if you need a tad more help, companies such as GreenDimes and 41pounds.org have got your back.


  • Get Better Mileage

Who knew cauliflower were such globe-trotters? Or that jet-setting tomatoes racked up frequent-flier miles? But it's true: North American produce typically travels a minimum of 1,500 miles. Grapes can clock 2,143 miles cruising from vineyards in Napa Valley to supermarket aisles in Chicago, gobbling up barrels of crude oil and spewing pollutants and greenhouse-gas emissions in their wake. By buying your produce locally, whether it's through the farmers' market or a community-assisted agriculture program, you can reduce your "food miles," otherwise known as the distance your food has to travel to get from the farm to your plate. Now that's fresh.


  • The 3 Rs

Reduce, Reuse, and Recycle-and in that order. Let's face it, we're mired deep in ecological debt because we're consuming more resources than nature can replenish. By gorging on more than our fair share of the world's resources, we're also diverting essentials such as food, clothing, and water from communities in greater need. So let's recap: It's better to reduce your personal consumption than it is to reuse something, and it's less environmentally taxing to reuse a product than to have it recycled. Separating recyclables from your regular trash, which barely takes any effort, is a no-brainer, of course; recycling aluminum, for instance, takes as little as 5 percent of the energy we'd need to manufacture virgin aluminum.

  • Get Off the Grid

Opt for clean, renewable energy if it's offered in your area. Low-impact sources such as wind, solar, and hydroelectric power reduce our dependence on coal-burning power plants, a major source of greenhouse-gas emissions. And because harnessing the power of renewable "fuels" such as sun and wind are free, your electric bill is likely to scale down because of the reduced price of wholesale electricity.

  • Slay Energy Vampires

You may not know it, but households across the globe are infested with vampires. Energy vampires, that is. Cleverly disguised as innocuous household appliances (psst, your television is one of them), their nasty pointed teeth plunge deep into your wall socket, draining power all hours of the day and night, even after you've switched them off. (Americans pay $1 billion a year to power our televisions and VCRs while they're turned off.) Other sleeper agents of the electric undead that consume 1,000 kilowatt hours a year per household, while in standby mode: your toaster, coffeemaker, hair dryer, PC, printer, cable box, and cell phone charger. You don't have to live in a constant state of fear, however, forever checking behind your back for that one appliance you forgot to pull the plug of. Just plug adjacent equipment into power strips with surge protectors, and before you crawl under the safety of your covers-or head out to work-simply flip the switch.

  • Go Au Naturale


Our chemical arsenal may be able to exterminate creepy crawlies and polish our countertops, but they're slowly killing us, too. The man-made chemicals we favor are like the obnoxious houseguest who overstays his welcome-an average of 200 industrial compounds, pollutants and other chemicals, for instance, were recently discovered in the umbilical-cord blood of newborns. (These included seven dangerous pesticides, some of which were banned in the U.S. more than 30 years ago.) We're serving our kids potent chemical cocktails even before they're born-not quite the head start they may have been hoping to get. Pesticides have also been implicated in Parkinson's disease, infertility, brain damage, and cancer. So ditch the poisons and choose natural, non-toxic, and equally effective methods of cleaning and corralling pests. You probably already have what you need in your kitchen to get started. Chowing down on organically grown food will cut out pesticides from your diet, as well.


  • Build it Green

Trees, in a word, rock. They absorb heat-trapping carbon dioxide, hold soil together to prevent landslides, and provide a rich habitat for diverse plants and animals. Choose furniture made from eco-friendly sources such as sustainably managed forests, bamboo, and reclaimed wood. Buying vintage wherever possible, rather than adding something new into the waste stream, is always in style. Also, look for furniture that is durable and likely long-lived-you'll save money on replacements in the future and prevent more wasted materials from winding up in the landfill. And, if for some reason, that dresser or dining table no longer suits your needs, something in fine shape will always have takers via Craig's List, eBay, or Freecycle.

  • Seeing Stars

The average home can pump out twice as much greenhouse-gas emissions as the average car. Purchasing energy-saving Energy Star-rated appliances, electronics, and lighting can help mitigate that, while slashing a third of your electric bill. (A power guzzler is nobody's friend.) Improving the energy efficiency of your home could even earn you tax credits from Uncle Sam.

=================================================
WARNING : SAVE OUR EARTH & STOP GLOBAL-WARMING
=================================================

WELCOME RAMADAN

ரமலானை வரவேற்போம்.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே....!
அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).
ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
ரமழான் மாதத்தின் சிறப்பு :
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).
‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).
இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது சிறப்பு:
‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
மூன்றாவது சிறப்பு:
‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
நான்காவது சிறப்பு:
‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஐந்தாவது சிறப்பு:
ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:
1-நோன்பு பரிந்து பேசும்:
‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை:
‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).
3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்:
‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
4-நோன்பின் கூலி சுவர்க்கம்:
‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
5- நரகத்தை விட்டு பாதுகாப்பு:
‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
6- ’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).
7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்:
‘எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்:
‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி:
‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
10-கஸ்தூரியை விட சிறந்த வாடை:
‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி, முஸ்லிம்).
மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.
ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள் நிய்யத்தின் அவசியம்: ‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).
பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ‘நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை.
நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும்.
‘நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.
ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு:
‘நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
‘நமது நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். (அபூதாவுத்).
‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.
ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்: ‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ ‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ பொருள் : நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’
இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.
ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).
இரவுக் காலங்களில் நின்று வணங்குவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).
‘எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
உம்ராச் செய்வது:
‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:
அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.
‘நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி).
ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:
பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.
‘எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை', என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
‘எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).
==================
நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக.....!
இறைவன் நம் நல்லமல்களை ஏற்று, நம் சிறு & பெரும் பாவங்களை மன்னித்து நம் அனைவரும் சொர்க்கம் சென்றடைய நற்கிருபை வழங்குவானாக.....!!

ஆமீன்.......!!!
=================