Monday, August 09, 2010

ரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம்


                               (click on the image to view larger size)

ல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!

வலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!

றைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

கையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

யர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!

த்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

யங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்!
 
 
நன்றி :  கலீல் அஹ்மத் பாகவீ  அவர்கள்
                 (பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா)


=========

மாதம் என்பதை மதம் என வாசித்தாலும் இங்கு இஸ்லாத்தின் மகிமையை உணரலாம்.

Monday, July 26, 2010

INDIA IN THE WORLD CUP FOOTBALL :-)

The only chance for India to Win in Football @ World Cup.




JAI HO........!!  :-)

Wednesday, July 21, 2010

இரண்டு அணா நாணயம்


நாம் உணர‌வேண்டிய 'புனித' பாடம்!

சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன், ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள். பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா. ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.

ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார். அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது. “என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.

பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார். மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார். பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார். அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார். அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.

அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069–ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம். அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது. அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார். அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069–ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார். சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார். உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார். அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார். “ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார். “அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார். “அன்றிரவு எங்களுக்கு உதவி புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”  இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.

இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார். அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார். அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின. “நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு!!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.

(வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து.....)


 
நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )

Sunday, July 18, 2010

UNIVERSITIES IN TAMIL NADU



List of Universities in Tamil Nadu offering Regular & Distance Education

Alagappa University, Sivanagar

Alagappa University - Directorate of Distance Education, Sivanagar
AMET University Chennai
Amrita Vishwa Vidyapeetham, Coimbatore
Anna University Chennai
Anna University Chennai - Centre for Distance Education
Anna University Coimbatore
Anna University Coimbatore - Directorate of Online & Distance Education
Anna University Trichy, Tiruchi
Annamalai University, Annamalai Nagar
Annamalai University - Directorate of Distance Education, Annamalai Nagar
Avinashilingam University for Women, Coimbatore
Bharath University, Chennai
Bharathidasan University, Tiruchi
Bharathidasan University - Centre for Distance Education, Tiruchi
Bharathiar University, Coimbatore
Bharathiar University - School of Distance Education, Coimbatore
Chettinad University, Kancheepuram
Dakshina Bharti Hindi Prachar Sabha, Chennai
Dr Ambedkar Law University, Chennai
Dr MGR Educational and Research Institute, Chennai
Gandhigram Rural University, Dindigul
Gandhigram Rural University - Distance Education Centre, Dindigul
Hindustan Institute of Technology & Science (HITE), Chennai
Kalasalingam University, Virudhunagar
Karunya University, Coimbatore
Karpagam University, Coimbatore
Manonmaniam Sundaranar University (MSU), Tirunelvali
Manonmaniam Sundaranar University - Directorate of Distance and Continuing Education, Tirunelvali
Madurai Kamraj University (MKU), Madurai
Madurai Kamraj University - Directorate of Distance Education (MKU-DDE), Madurai
Meenakshi University, Chennai
Mother Theresa Women's University, Kodaikanal
National Institute of Technology Tiruchirappalli (NITT)
PRIST University, Thanjavur
PRIST University Centre for Distance Education, Thanjavur
Periyar University
Periyar Maniammai University, Thanjavur
Periyar Institute of Distance Education (PRIDE), Salem
SASTRA University, Thanjavur
Saveetha University, Chennai
Sathyabama University, Chennai
SRM University, Kancheepuram
Sri Chandrasekharendra Saraswathi Viswa Mahavidyalaya, Kancheepuram
Sri Ramachandra Medical College & Research Institute, Chennai
St Peter's University, Chennai
St Peters Institute of Distance Education, Chennai
Tamil Nadu Dr Ambedkar Law University, Chennai
Tamil Nadu Dr MGR Medical University, Chennai
Tamil Nadu Open University (TNOU), Chennai
Tamil Nadu Physical Education and Sports University, Chennai
Tamil Nadu Physical Education and Sports University Directorate of Distance Education, Chennai
Tamil Nadu Agricultural University, Coimbatore
Tamil Nadu Agricultural University - Directorate of Open and Distance Learning, Coimbatore
Tamil University, Thanjavur
Tamilnadu Veterinary & Animal Sciences University, Chennai
Thiruvalluvar University, Vellore
University of Madras (UnOM), Chennai
University of Madras - Institute of Distance Education, Chennai
VELs University, Chennai
Vellore Institute of Technology, Vellore
Vinayaka Missions University, Salem
Vinayaka Missions University Directorate of Distance Education, Salem

Monday, July 12, 2010

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி விருதுகள்

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி விருதுகள்
ஜெர்மனியின் இளம் வீரர் தாமஸ் முல்லருக்கு நேற்று இரண்டு விருதுகள் கிடைத்தன. சிறந்த இளம் வீரருக்கான விருது மற்றும் கோல்டன் பூட் விருது ஆகியவற்றை அவர் தட்டிச் சென்றார்.

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் இந்த விருதுகளுக்குக் கடும் போட்டி நிலவி வந்தது. ஜெர்மனியின் குளோஸ், ஸ்பெயினின் வில்லா உள்ளிட்ட சிலர் இந்த விருதுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

சிறந்த வீரர் டியகோ போர்லான்

சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை உருகுவே வீரர் டியகோ போர்லான் தட்டி்ச் சென்றார். உருகுவேயின் சிறப்பான ஆட்டத்திற்கு போர்லானின் பங்கு மிகப் பெரியது. இந்தத் தொடரில் இவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார்.

2வது இடம் நெதர்லாந்தின் ஸ்னீடருக்கும், 3வது இடம் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கும் கிடைத்தது.

அதிக கோல்கள் அடித்தவர் தாமஸ் முல்லர்

அதிக கோல்கள் அடித்த வீரராக ஜெர்மனியின் தாமஸ் முல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் அவர் ஐந்து கோல்கள் அடித்திருந்தார். இதுதவிர 3 கோல்கள் கிடைக்கவும் இவர் காரணமாக இருந்தார்.

இதன் காரணமாக டேவிட் வில்லா, ஸ்னீடரை முந்திக் கொண்டு விருதை தட்டிச் சென்றார். இந்த இருவரும் கூட தலா ஐந்து கோல்களைப் போட்டிருந்தனர். இருப்பினும் தத்தமது அணிகளுக்கு தலா ஒரு கோல் கிடைக்க மட்டுமே இவர்கள் உதவியாக இருந்ததால், முல்லருக்கு விருது கிடைத்தது.

சிறந்த கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ்

சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருதை தட்டிச்சென்றார் ஸ்பெயின் கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ். இந்தத் தொடரில் ஸ்பெயின் அணி 2 கோல்களை மட்டுமே வாங்கியது. இந்த சிறப்புக்கு இகர் கேசில்லாஸின் சிறப்பான செயல்பாடே காரணம்.

சுவிட்சர்லாந்திடம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது ஸ்பெயின். இதனால் கேசில்லாஸ் விமர்சனத்துக்குள்ளானார். ஆனால் அடுத்து வந்த அத்தனை போட்டிகளிலும் ஸ்பெயின் பிரமாதமாக ஜெயித்தது. ஒரு கோல் கூட ஸ்பெயினுக்கு எதிராக விழாமல் அட்டகாசமாக கீப்பிங்கை செய்தார் இகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இளம் வீரர் தாமஸ் முல்லர்

சிறந்த இளம் வீரருக்கான விருதும் ஜெர்மனியின் முல்லருக்கே கிடைத்தது. ஜெர்மனி அணி 3வது இடம் வரை வந்ததற்கு முல்லரின் ஆட்டமே முக்கிய காரணம். இந்தத் தொடர் முழுவதும் முல்லர் படு விறுவிறுப்பான ஆட்டத்தைக் காட்டி அசத்தியிருந்தார்.

நேர்மையான ஆட்டம் தந்த அணி ஸ்பெயின்

சிறந்த ஃபேர்பிளே விருது ஸ்பெயின் அணிககே கிடைத்தது.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் இனியஸ்டா

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்பெயினின் ஆன்டிரஸ் இனியஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போட்ட கோல்தான் ஸ்பெயினுக்கு கோப்பையை வாங்கித் தந்தது என்பதால் இந்தப் பரிசு.

Courtesy : That's Tamil . com

Wednesday, April 28, 2010

அவன் தூயவன்


அந்தரத்திலே உலகம்..!
ஆளில்லா வானவெளி...!

எங்கிருந்து வந்தோம்....?!
எங்கு செல்வோம்....?!
நம் கண்களுக்கு தெரியவில்லை.....!!

இங்கு காற்றில் மிதக்க வைத்தான்....!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்....!
கருவறை நோக்கிய பயணத்தில்.....!

கோடி போட்டியாளரில்
நம்மை முடிசூட வைத்தான்....!

அட்டை பூச்சி போல நாம்
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்...!

நம்மை இரத்த கட்டியாக்கினான்....!
பின் சதைக்கட்டியாகினான்.....!
பின் எலும்பு கொண்டு போற்றினான்...!

நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது,
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்....!

மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான.....!

நம் தாயின் பாலை நமக்கு
இனிப்புடன் உற்பத்தி செய்தான்....!

அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்....!
கோடையில் குளிர்சாதன பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்....!

இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்....!

உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை என்கிறாயே..!

நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான்.

மனிதனே.......!
அந்த ஒருவனை மறந்துவிடாதே.....!

அவன் ஒருவன்....!
அவன் தனித்தவன்.......!

சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன..!!

விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!

விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்...!

உலகை அடக்கி ஆள்பவன்....!

அவன் மகா தூயவன்.....!!


எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே......!!!

நன்றி:  தஃபாரக் குழுமம்

Sunday, April 11, 2010

APPLE A DAY... CANCELS CANCER AWAY :-)

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெறுகிறார்கள். தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறர்களுக்கு 50 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. ஆப்பிள் பழத்தின் தசைப் பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங்கு புற்றுநோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது என போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

போலந்து விஞ்ஞானிகளின் ஆய்வினையும் அதன் கண்டுபிடிப்புகளையும் விளக்கும் கட்டுரை “கான்சர் பிரிவென்சன்" இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரை விவரம் வருமாறு:

ஆப்பிள் பழம் உடல் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்ற கருத்து உலகமெங்கும் பரவி உள்ளது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறவர் தன் வீட்டுக்கு மருத்துவர் வரவிடாமல் தடுத்துவிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் 592 பேரைப் பேட்டி கண்டு போலந்து விஞ்ஞானிகள் பேசினர்.

அந்த புற்று நோயாளிகளின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் விசாரித்து அறிந்தனர். மருத்துவ மனையில் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் புற்று நோய¢ பாதிக்காத 765 நோயாளிகளையும் அவர்கள் கண்டு பேசினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்தில் 9.5 முறை ஆப்பிள் பழத்துண்டுகள் சாப்பிட்டதாகக் கூறினார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்படாதவர்கள் ஒரு வார காலத்தில் 11 முறை ஆப்பிள் துண்டுகள் சாப்பிட்டுள்ளனர். தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் 35 சதவீத பாதுகாப்பை பெறுகிறார்கள். ஒரே நாளில் ஒரு பழத்துக்கு மேல் ஆப்பிள் சாப்பிட்டவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்பை பெறுகிறார்கள். இத்தகைய பாதுகாப்பை மனிதர்களுக்கு வழங்குவது ஆப்பிள் பழத்தில் உள்ள ஃபிளாவினாய்ட்ஸ் என்ற சத்துப் பொருள்தான்.

இந்த சத்துப் பொருள் ஆப்பிள் தோலிலும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பகுதியைவிட தோலில் 5 மடங்கு அதிகம் ஃபிளாவினாய்ட்ஸ் உள்ளன. எனவே ஆப்பிள் பழத்தை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். தோலை சீவி எறிந்துவிட்டால் ஆப்பிள் பழம் தரும் கான்சர் பாதுகாப்பு உரிய அளவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.


A for APPLE  & 
A for AAROKYAM
A for AMAITHI
A for AANANTHAM  :-)  A for Adirai's Amazing Anwar :-)

Wednesday, March 31, 2010

காய்... கறி... கனி...


காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.

பீட்ரூட்:  ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.

வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.

மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.

சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.

முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
 
 
உணவே மருந்து...  மருந்தே உணவு.

Thursday, March 25, 2010

EARTH HOUR 2010

MARCH 27, 2010 - SATURDAY 20:30 PM

By turning off their non-essential lighting for one hour—Earth Hour— UAE citizens will join millions of people around the world in their commitment to fight climate change and send a message to leaders that the time to act is now.

Ultimately, the UAE Earth Hour 2010 seeks to raise awareness about climate change and encourage the UAE residents, business leaders and government officials to take action and start planning a reduction in CO2 emissions.

With every flick of a light switch, a vote is cast for lasting action on the escalating climate crisis.

Set your clock

On March 27th at 8:30 p.m. local time, Earth Hour will cascade around the globe - from time zone to time zone - uniting the planet under a single, simple, call to action.
 
Supporting Firms in UAE

• Abu Dhabi Transport Authority
• Abu Dhabi Municipality
• HSBC Bank Middle East Ltd
• Jumeirah Beach Hotel
• Hilton Ras Al Khaimah Hotel
• Grosvenor House Dubai
• Department of Transport
• Dubai eGovernment
• Dubai Holding
• Dubai Chamber of Commerce
• Enpark
• Environment Agency - Abu Dhabi
• Emirates Wildlife Society - WWF
• Dubai Police
• Fairmont Dubai
• Schneider Electric FZE
• Le Royal Meredien Beach Resort & Spa Dubai
• Kraft Foods
• Khidmah LLC
• Trane Middle East
• Dubai Silicon Oasis Authority
• Sharjah Megamall
• Sharjah Aquarium
• Sharjah Science Museum
• Coca Cola Middle East
• Dubai Aluminium Company Limited
• ADGAS
• ADIA
• ADWEC
• AFC
• Abu Dhabi Ports Company
• Abu Dhabi Motorsport Management - Yas Marina Circuit
• Al Manzil and Qamardeen Hotels
• Aldar Properties PJSC
• Aldar HQ building
• Al Qasba
• Al Qasr
• Beach Kiosk
• Better Homes LLC
• Burj Al Arab
• BUNDUQ Oil Company Ltd.
• C&I
• Canon Middle East
• Centre of Ambulance Services
• Clifford Chance
• Corporate Office
• DAM Villas
• Department of Tourism and Commerce Marketing
• Department of Tourism and Commerce Marketing Dubai
• DNVPS
• Dome International LLC
• Dubai eGovernment
• Dubai First Bank
• Dubai Land Department
• Dubai Municipality
• Dubai Properties Group
• DPG Customers
• DPG Suppliers
• DPG Investors
• DPG Employees
• Dubai Sports Council
• Dubai World Trade Centre
• Dulsco
• Eco-Chicks
• Edama Consulting
• Emirates Academy
• Emirates Diving Association
• Emirates Exhibition Services
• Emirates Group
• Emirates Palace
• Enviromena Power Systems
• Environment Friends Society
• Etihad Airways
• Etisalat Head Office – Abu Dhabi
• Etisalat Dubai
• Etisalat Fujairah
• Etisalat Sharjah
• Etisalat Ras Al Khaimah
• Fairmont Bab Al Bahr
• Farah Leisure Parks Management
• First Select International
• Gartner Gulf
• GEMS Education
• General Electric
• Global Carers
• Hamham School
• Health Club
• Heilbronn
• Hilton Dubai Jumeirah
• Hyatt Regency Dubai
• Ibis Al Barsha
• Imdaad LLC
• India Club
• Jones Lang LaSalle
• Jumeirah Group
• Jumeirah Bab Al Shams
• Jumeirah Emirates Towers
• Jumeirah Living World Trade Centre Residence
• Jumeirah Restaurants
• KEO International
• Knowledge and Human Development Authority
• KONE Middle East
• Le Meridien Al Aqah Beach Hotel
• Le Meridien Al Aqah Beach Resort Fujairah
• Lotus Grand Hotel Apartments
• Madinat Jumeirah
• MAF Dalkia Middle East
• Malakiya Villa
• Masdar
• Masdar Institute of Science and Technology
• Media One Hotel
• Mina Al Salam
• myfootprint.ae
• National Bank of Abu Dhabi
• Nokia MEA
• Noor Islamic Bank
• NORR Group Consultants Int'l
• Pai Thai
• Papillon Beauty Salon
• Pier Chic
• Polarcus
• Radisson Blu Hotel Dubai Media City
• Radisson Blu Residence, Dubai Marina
• Raffles Dubai
• Ready Mix Beton
• Rivington
• Rota
• SAI
• Segretto
• Sharjah Science Museum
• Sheraton Abu Dhabi Hotel & Resort
• Sheraton Jumeirah Beach Resort & Towers
• Spa
• TNH
• TECOM Investments
• The Yas Hotel
• Traders Hotel, Dubai
• Twofour54
• Union National Bank
• Urbano
• Wasl Asset Management Group
• Wild Wadi

DO SUPPORT PERSONALLY IN ORDER TO SAVE OUR EARTH FOR OUR NEXT GENERATION


பெற்றோரை போற்றுவோம்...... &


நம் பரம்பரையை பெற்ற & பெறப் போகும் இந்த பூமியை பாதுகாப்போம்...!!!

Monday, March 22, 2010

JOB PLACEMENT :-)

HOW TO RECRUIT THE RIGHT PERSON FOR THE JOB?

Put about 100 bricks in some particular order in a closed room with an open window.  Then send 2 or 3 candidates in the room and close the door.

Leave them alone and come back after 6 hours and then analyze the situation.

If they are counting the bricks, Put them in the ACCOUNTS DEPT.

If they are recounting them., Put them in AUDITING

If they have messed up the whole place with the bricks, Put them in ENGINEERING.

If they are arranging the bricks in some strange order, Put them in PLANNING

If they are throwing the bricks at each other, Put them in OPERATIONS

If they are sleeping, Put them in SECURITY

If they have broken the bricks into pieces, Put them in INFORMATION TECHNOLOGY

If they are sitting idle, Put them in HUMAN RESOURCES

If they say they have tried different combinations, yet not a brick has been moved, Put them in SALES

If they have already left for the day, Put them in MARKETING

If they are staring out of the window, Put them on STRATEGIC PLANNING

And then last but not least.........

If they are talking to each other and not a single brick has been removed, Congratulate them and put them in TOP MANAGEMENT



In which Department you are working at Present? :-))

Thursday, March 11, 2010

Dubai International PEACE Convention 2010


Visit & Register @ www.peaceconvention.com

Visit & Gather @ Dubai Airport Expo.

Gather good speaches, apply in your life, do good deeds and see you @ Jannath Al Firdouz

Wednesday, March 10, 2010

JOB VACANCIES IN GULF REGION


Technical Manager Required - Dubai>>
http://www.jobshob.org/2010/03/technical-manager-required-dubai.html

Sr. Petroleum Engineer Required - Abu Dhabi>>
http://www.jobshob.org2010/03/sr-petroleum-engineer-required-abu.html

Radio Active Analyst Required - Abu Dhabi>>
http://www.jobshob.org/2010/03/radio-active-analyst-required-abu-dhabi.html

Stainless Steel Work - Fabricator - Dubai>>
http://www.jobshob.org/2010/03/stainless-steel-work-fabricator-dubai.html

Quality Assurance Specialists - Abu Dhabi>>
http://www.jobshob.org/2010/03/quality-assurance-specialists-abu-dhabi.html

Project Controls Planners, And Quantity Surveyors Required - Abu Dhabi>>
http://www.jobshob.org/2010/03/project-controls-planners-cost.html

F & B MANAGER Required in Hospitality Business - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/f-b-manager-required-in-hospitality.html

Marketing Professionals and Customer Service Agents Required in Call Center - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/marketing-professionals-and-customer.html

Multiple Positions in Fara'a Integrated Construction Group - UAE>>
http://www.jobshob.org/2010/03/multiple-positions-in-faraa-integrated.html

Head of Research and Analysis - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/head-of-research-and-analysis-saudi_03.html

Jobs in Al-Wisam International School - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/jobs-in-al-wisam-international-school.html

Multiple Positions in Construction Business - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/multiple-positions-in-construction.html

Professionals Required in Steel Fabrication Company - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/professionals-required-in-steel.html

Chief Financial Officer, Accountant and Transport In-charge Required - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/chief-financial-officer-accountant-and.html

Executive Secretary Required - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/executive-secretary-required-saudi.html

Multiple Jobs in Construction Company - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/multiple-jobs-in-construction-company.html

Assistant Receptionist Required in Diplomatic Mission - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/assistant-receptionist-required-in.html

Manager of Organization and Methods - Qatar>>
http://www.jobshob.org/2010/03/manager-of-organization-and-methods.html

IT Security and Compliance Officer - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/it-security-and-compliance-officer.html

Middle East Oil & Gas Associate - UAE>>
http://www.jobshob.org/2010/03/middle-east-oil-gas-associate-uae.html

Senior Relationship Manager - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/3/senior-relationship-manager-saudi.html

Managing Director of Corporate Coverage - UAE>>
http://www.jobshob.org/2010/03/managing-director-of-corporate-coverage.html

Head of Research and Analysis - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/head-of-research-and-analysis-saudi.html

Multiple Position in Building Construction Company - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/multiple-position-in-building.html

Wednesday, February 24, 2010

கற்க..... கசடற...!!



சென்னைக்கு அருகில் இருக்கும் ஆவடியில் நந்தகுமாரின் இளமைப்பிராயம் கழிந்தது. பண்ணிரண்டு வயது. ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். பள்ளிக்குச் செல்வது வேப்பங்காயாய் கசந்தது. கற்கும் பாடங்கள் நினைவில் நிற்பதில்லை. கற்றல் குறைபாடு அவருக்கு தீராதப் பிரச்சினையாக இருந்தது. ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா (Dyselxia) என்று அழைக்கப்படும் இந்த உளவியல் பிரச்சினை கற்றல் தொடர்பானது.
.
பள்ளிக்குச் செல்வதை நிறுத்தும் மாணவர்கள் வழக்கமாக நம்மூரில் என்னவெல்லாம் செய்வார்களோ, அதையே தான் நந்தாவும் செய்தார். லாட்டரி டிக்கெட் விற்றார். வீடியோ கடையில் எடுபிடியாக வேலை பார்த்தார். மெக்கானிக் ஷெட்டில் கையில் க்ரீஸ் அழுக்கோடு நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருந்தது. ஜெராக்ஸ் கடையில் சில காலம். இப்படியாக எதிர்காலம் குறித்த எந்த தெளிவான முடிவும் அவரிடம் இல்லாமல் வாழ்க்கை சக்கரம் சுற்றிக் கொண்டிருந்தது.
.
பிரச்சினை நந்தகுமாரோடு முடிந்துவிட்டிருந்தால் தேவலை. நந்தகுமாருக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. முன் ஏர் எப்படிப் போகுமோ, அப்படித்தான் பின் ஏரும் போகும் என்பது ஊர்களில் பேசப்படும் சொலவடை. நந்தகுமாரைப் பின்பற்றி அவரது தங்கைகளும், தம்பியும் மிகச்சரியாக, சொல்லி வைத்தாற்போல் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள். ஒரு குடும்பத்தின் நான்கு வாரிசுகளுமே கல்வியை பாதியில் விட்டால், சமூகம் அந்தக் குடும்பத்தை எப்படிப் பார்க்கும்? இத்தனைக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத அளவுக்கு வறுமையெல்லாம் அக்குடும்பத்தில் இல்லை. தெருப்பிள்ளைகள் இவர்களோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. “அந்தப் பசங்க மக்குப்பசங்க. அவங்களோட சேர்ந்தா நீங்களும் மக்காயிடுவீங்க!” உற்றாரும், உறவினரும் கேலியாகவும், கிண்டலாகவும் நால்வரையும் பார்த்தார்கள்.
.
புத்தருக்கு ஞானம் கிடைக்க போதிமரம் கிடைத்தது. போதிமரத்தடியில் உட்காராமலேயே திடீரென ஒருநாள் புத்தர் ஆனார் நந்தகுமார். பள்ளிக்குப் போகாமலேயே பிரைவேட்டாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் என்ன? நண்பர் ஒருவர் அதுபோல எழுதலாம் என்று ஆலோசனை சொல்ல எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்தார் நந்தா. இந்த வெற்றி தந்த பெருமிதம் பத்தாம் வகுப்புத் தேர்வையும் எழுதவைத்தது. இதுவும் பாஸ். “அடடே. எல்லாமே ஈஸியா இருக்கே? பள்ளியிலேயே சேர்ந்து படிக்கலாம் போலிருக்கே?” என்று எண்ணினார் நந்தா. எட்டாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் பிரைவேட்டாக எழுதிய அவரை +1 வகுப்பில் சேர்க்க பள்ளிகள் மறுத்தன. போராடிப் பார்த்தார். முடியவில்லை. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல +2 தேர்வையும் பிரைவேட்டாகவே எழுதி வென்றார் நந்தா.
.
இப்போது கல்லூரியில் சேர்ந்து பயிலும் ஆசை நந்தாவுக்குள் முளைவிட்டிருந்தது. பள்ளியில் படிக்காமல் எட்டு, பத்து, பண்ணிரெண்டு என்று எல்லா வகுப்புகளையுமே பிரைவேட்டாக தேறியிருந்த நந்தாவை சேர்த்துக்கொள்ள கல்லூரிகளுக்கு மனமில்லை. கல்லூரிதோறும் கால்கடுக்க ஏறி, இறங்கி கடைசியாக வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆங்கிலம் இளங்கலை படிப்பை படிக்க ஆரம்பித்தார் நந்தா. அம்பேத்கர் கல்லூரியில் இளங்கலை முடிந்ததும் சென்னை மாநிலக்கல்லூரியில் அதே ஆங்கில இலக்கியத்தை முதுகலையாக கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போது கல்வி தவிர்த்து, என்.சி.சி. போன்ற விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.
.
முதுகலைப்பட்டம் பெற்ற பிறகும் ‘என்னவாக ஆகப்போகிறோம்?’ என்று எந்த முன்முடிவும் நந்தாவிடம் இல்லை. என்.சி.சி.யில் இருந்ததால் இராணுவம் தொடர்பான பணி எதிலாவது சேரலாம் என்று நினைத்தார். சென்னையில் இராணுவ அதிகாரிகளை உருவாக்கும் ஆபிஸர்ஸ் டிரைனிங் அகாடமி (OTA)-யில் சேர்ந்தார். இடையில் ஒரு விபத்து ஏற்பட, அந்தப் படிப்பையும் பாதியில் விட வேண்டியதாயிற்று.
.
அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து அறிந்தார். அதுவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்றால் பட்டப்படிப்பு போல மூன்று வருடங்கள் படிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எல்லோரையும் போல நந்தாவும் நினைத்திருந்தார். சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டித்தேர்வு போதுமானது என்ற விஷயமே நந்தாவை மிகவும் கவர்ந்தது.
இன்று நந்தகுமார், ஐ.ஆர்.எஸ், சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தில் துணை ஆணையளராகப் பணிபுரிகிறார். ஒரு காலத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் சேர்க்கத் தயங்கிய மாணவர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, நாட்டை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்.
.
முப்பத்து மூன்று வயதான நந்தகுமாரை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தோம். “எனக்கே எல்லாமே ஆச்சரியமாதாங்க இருக்கு. திடீருன்னு மறுபடியும் படிக்கணும்னு ஆர்வம் வந்தது. விடாமுயற்சியோடு, கடுமையாகப் படித்தேன்னு எல்லாம் சொல்லமுடியாது. சின்சியரா படிச்சேன். அவ்ளோதான்” என்று அளவாகப் புன்னகைக்கிறார்.
.
“கல்வி மிக மிக முக்கியமானதுங்க. ஆனா நம்மோட கல்விமுறையிலே எனக்கு கொஞ்சம் அதிருப்தி இருக்கு. நம்ம கல்விமுறை படிப்பாளிகளை உருவாக்குதே தவிர, அறிவாளிகளை உருவாக்குவதாக தெரியவில்லை. மாணவர்கள் கல்வி என்றால் கசப்பானது என்று நினைக்காமல் ஆர்வத்தோடு பள்ளிக்கு வரும் வகையில் நம்ம கல்விமுறையை மாற்றணும். கொடுமை பாருங்க. நான் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தயாராகும்போது படிச்சதெல்லாம் ஏற்கனவே பள்ளியில் படிச்சதா தானிருக்கு. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை வேறு வேறு வடிவங்களில் படிச்சிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. ஒருவன் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த வயதுக்கு தேவையான வாழ்க்கைக்கல்வி இன்றைய சூழலில் அவசியம்! அப்புறம், சிவில் சர்வீஸ் எக்ஸாம்னாலே எல்லோரும் ஏதோ பெரிய பட்டப்படிப்பு மாதிரி பயப்படுறாங்க. இது ஒரு போட்டித்தேர்வு, பட்டப்படிப்பு அல்ல. பயமில்லாம நிறைய பேர் இந்த தேர்வுகளை எழுதணும். நம்ம இளைய தலைமுறை எதிர்ப்பார்க்கிற அட்வெஞ்சர் கேரியரா நிச்சயமா சிவில் சர்வீஸ் அமையும். ஆறாவது ஊதியப்பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்த்துக்கு அப்புறமா நல்ல சம்பளமும் கிடைக்குதுங்க!” என்கிறார். கற்றல் தொடர்பான டிஸ்லெக்சியா பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட வென்றுவிட்டேன் என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.
.
“அதிருக்கட்டும் சார், உங்களைப் பார்த்து படிப்பை பாதியில் விட்ட உங்க தங்கைகள், தம்பி என்ன ஆனாங்க?” என்று கேட்டால், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். .
“சொன்னா நிச்சயமா நம்பமாட்டீங்க. நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ன்னு அவங்களும் என்னை பின் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்கன்னா உங்களால நம்ப முடியுதா?”
.
படிப்பை பாதியில் நாலுபேரும் அடுத்தடுத்து விட்டதை கூட நம்பிவிடலாம். மீண்டும் தன்னெழுச்சியாக படித்து நல்ல நிலைக்கு சொல்லிவைத்தாற்போல நான்கு பேருமே உயர்ந்திருப்பது என்பது கொஞ்சம் சினிமாத்தனமாக தெரிந்தாலும், நந்தகுமாரின் குடும்பத்தில் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கல்வி அடிப்படையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான குடும்பம் இன்று, அதே கல்வியாலேயே தலைநிமிர்ந்து வாழ்வது மகிழ்ச்சியான விஷயம்தான் இல்லையா?
.
நன்றி : புதிய தலைமுறை
.
=========================================
கல்வியின் வேர்கள் கசப்பானவை,
ஆனால்
அதன் கனிகளோ மிக இனிப்பானவை..!
========================================

Sunday, February 07, 2010

FOUR THINGS ....


The Holy Prophet Mohammed (SAL) narrated as follows :-

.
Four things that make your body sick:
a) Excessive talking
b) Excessive sleeping
c) Excessive eating and
d) Excessive meeting other people

.
Four things that destroys the body:
a) Worrying
b) Sorrow (Sadness/Grief)
c) Hunger
d) Sleeping late in the night

.
Four things that dry the face & take away its happiness:
a) Lying
b) Being disrespectful / impudent (insisting on something wrong knowingly)
c) Arguing without adequate knowledge & Information.
d) Excessive immorality (doing something wrong without fear).

.
Four things that increases the wetness of face & its happiness:
a) Piety
b) Loyalty
c) Generosity (being kind)
d) To be helpful to others without he/she asking for that.

.
Four things that stop the Rizq (Sustenance)
a) Sleeping in the morning (from Fajr to sunrise)
b) Not Performing Namaz or Ir-regular in Prayers
c) Laziness / Idleness
d) Treachery / Dishonesty

.
Four things that bring / increase the Rizq:
a) Staying up in the night for prayers.
b) Excessive Repentance
c) Regular Charity
d) Zikr (Remembrance of Allah / God).

.
Do Remember this Powerful Dua'a for Better Life :
.
"Allahumma- Inni- Ala- Zikr-ika -Wa-Shuk-rika Wa-Husni-Ibaadatik".

Thursday, February 04, 2010

READ & HELP


Hi Readers,
.
If you know anyone who has met with a fire accident or people who are born with physical problems or disabilities such as jointed ear, nose and mouth, please note they can avail free plastic surgery at Pasam Hospital - KODAIKANAL from March 23rd to 4th April 2010 by German Doctors will be treated those patients on free of cost.
.
Contact Nos. +91 (0)4542 - 240668 / 245732
.
Heart Surgery on Free oCost for Children between 0 and 10.
Shri Satya Sai Institute, Banglore – Ph : 080 28411500
.
Please inform to your circles....!
.
Someone will be benefited somewhere by your efforts.
.
GOD BE WITH YOU & YOU WILL BE REWARDED BY GOD.

Sunday, January 31, 2010

7 Easy Ways to Lose Weight Without Starving or Breaking a Sweat


Weight loss requires two things: burning calories through exercise and cutting them through smart food choices and portion control. In theory, you could create a calorie deficit by spending hours at the gym, but that's not realistic-or much fun. And who wants to live on lettuce leaves? Instead, try these seven everyday moves to drop pounds effortlessly.
.
1. Fidget James Levine, MD, of the Mayo Clinic in Rochester, MN, has spent a decade studying the role that everyday movement, or NEAT (nonexercise activity thermogenesis), plays in metabolism. His discovery: People who tap their feet, prefer standing to sitting, and generally move around a lot burn up to 350 more calories a day than those who sit still. That adds up to nearly 37 pounds a year!
.
2. Keep most meals under 400 calories Study after study recommends spacing out your meals at regular intervals and keeping them all about the same size. Eating meals at regular intervals has been linked to greater calorie burning after eating, better response to insulin, and lower fasting blood cholesterol levels. When you eat regular meals throughout the day, you're less likely to become ravenous and overeat.
.
3. Take yourself off cruise control Increase the intensity of your everyday tasks, from vacuuming to walking the dog, recommends Douglas Brooks, an exercise physiologist and personal trainer in Northern California. "Turn on some music, add in some vigorous bursts, and enjoy the movement," he says.
.
4. Drink 8 glasses of water per day Water is not just a thirst quencher--it may speed the body's metabolism. Researchers in Germany found that drinking two 8-ounce glasses of cold water increased their subjects' metabolic rate by 30%, and the effect persisted for 90 minutes. One-third of the boost came from the body's efforts to warm the water, but the rest was due to the work the body did to absorb it. "When drinking water, no calories are ingested but calories are used, unlike when drinking sodas, where additional calories are ingested and possibly stored," explains the lead researcher, Michael Boschmann, MD, of University Medicine Berlin. Increasing water consumption to eight glasses per day may help you lose about 8 pounds in a year, he says, so try drinking a glass before meals and snacks and before consuming sweetened drinks or juices.
.
5. Step it up--and down Climbing stairs is a great leg strengthener, because you're lifting your body weight against gravity. In addition to taking the stairs at every opportunity, try stepping up and down on the curb while you're waiting for the bus or filling your gas tank, says Brooks.
.
6. Use grocery bags as dumbbells Letting someone else load your groceries or carry your suitcase is an opportunity missed for strengthening and calorie burning, says certified coach Beth Rothenberg, who teaches a class for fitness professionals at UCLA. "Carry your groceries, balanced with a bag in each hand, even if you have to make several trips," she says. "And pack two smaller suitcases instead of one big one, so you can carry them yourself."
.
7. Eat 4 g of fiber at every meal A high-fiber diet can lower your caloric intake without making you feel deprived. In a Tufts University study, women who ate 13 g of fiber or less per day were five times as likely to be overweight as those who ate more fiber. Experts see a number of mechanisms through which fiber promotes weight loss: It may slow down eating because it requires more chewing, speed the passage of food through the digestive tract, and boost satiety hormones. To get 25 g of fiber a day, make sure you eat six meals or snacks, each of which contains about 4 g of fiber. For to-go snacks, buy fruit; it's handier than vegetables, so it's an easy way to up your fiber intake. One large apple has just as much fiber (5 g) as a cup of raw broccoli.
------------ courtesy : Yahoo Health

Thursday, January 21, 2010

க்ரீன் டெக்னாலஜி - GREEN TECHNOLOGY


க்ரீன் டெக்னாலஜி’ (GREEN TECHNOLOGY) என்னும் சொல் கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பிறகு பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல்லாகியிருக்கிறது. தமிழில் பச்சை தொழில்நுட்பம் என்று பச்சையாக மொழிப்பெயர்க்காமல் ‘சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்’ என்று நம் வசதிக்கு அழகாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
.
இந்த ஆண்டிலிருந்து பொருளாதார கேந்திரமான வால்ஸ்ட்ரீட் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை மையமாக்கி செயல்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிய துறைகளையே பெரிதுமாக பொருளாதாரத்துக்கு உலகம் நம்பிக் கொண்டிருந்தது. உலகமே இவற்றில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.
.
புவிவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக இவற்றுக்கு மாற்று தொழில்நுட்பத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இன்று மனிதகுலத்துக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் வளங்களை எந்தவிதத்திலும் சேதாரப்படுத்தாமல், அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் நகர்வது சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும்.
.
எனவேதான் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அரசுகளாலும், பல நிறுவனங்களாலும் இத்துறை வளர்ச்சிக்காக செலவழிக்கப்படப் போகும் தொகை நாம் கனவில் கூட காணமுடியாததாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளுக்கு கைகொடுக்கும் எனவும் தெரிகிறது.
.
எதிர்காலத்தில் வளர்ச்சி அடையப்போகும் துறை எப்படி இருக்கும் என்று துல்லியமாக விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான். காப்பி குடித்துவிட்டு நாம் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்பிலிருந்து, விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் எரிபொருள் வரை எல்லாவற்றையுமே மாற்றப்போகிறோம் என்று புரிந்துக் கொள்ளுங்கள். மின்சாரத்துக்கு மாற்று வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயற்கைக்கு இணக்கமில்லாத எல்லா விஷயங்களையும் தூக்கி கடாசிவிட்டு, புதிய விஷயங்களை உருவாக்கப் போகிறோம். புதியதோர் உலகம் படைக்கப் போகிறோம். நீங்கள் எழுதும் பேனாவிலிருந்து, வீடு, ரோடு என்று ஒன்றுவிடாமல் எல்லாமே மாறப்போகிறது.
.
இப்போது இருக்கும் விஷயங்களே, நம் பயன்பாடுகளுக்கு இலகுவாகதானே இருக்கிறது, நாம் ஏன் மாற்ற வேண்டும்? என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு எழலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? உலகு உயிர்ப்போடு இருந்தால் தான் மனிதக்குலமும் வாழும். இதுவரையிலான நமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், தயாரிப்புகளும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை. இவற்றை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் சில நூறு அல்லது சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் புல், பூண்டு கூட மிச்சமிருக்காது. இயற்கையின் கோபத்தை யார் தான் தாங்கிவிட முடியும்?
.
எல்லாவற்றையும் மாற்றுவதற்கான பணி இவ்வருடம் தொடங்குகிறது. இது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்பணி பல நூற்றாண்டுகளாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் தான், கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில் நாம் பாழ்படுத்திய உலகை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

நலிந்து கொண்டிருக்கும் விவசாயத்திற்க்கு மீண்டும் ஒரு விடிவு காலம் பிறந்தால் சரி தான்.
.
ஒயிட் காலர், ப்ளூ காலர் வேலையை எல்லாம் மறந்துடுங்க. இனிமேல் எல்லாருக்குமே க்ரீன்காலர் வேலைதான்!
.
அடுத்து, இவ்வுலகத்தை ஆட்டி வைக்க காத்திருக்கும் (NANO TECHNOLOGY)நானோ தொழில்நுட்பத்தை பற்றி அறிவோம்...!!
.
அதுவரை விளம்பர இடைவேளை. :-)

Monday, January 18, 2010

டிவிக்களில் ஸ்கைப்...!


வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VOIP) தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.
.
இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த "டி.வி'க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.
.
இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை "டிவி'க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. வீடியோ அழைப்புகளை இந்த "டிவி'க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை "டிவி'க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன.
.
இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது. ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன.இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம். :-)

Saturday, January 09, 2010

IELTS MATERIALS FOR SALE :-)

Dear ALL,
.
Seasons' Greetings!!!
.
Hoping that you are all doing well.
.
Reference to the mentioned subject, please be informed that I have the original Official Practice Material for Genetal Training Module (Book and audio CD) and the well gathered & downloaded book of ACE THE IELTS (paid thro' internet) and some other useful information, guidance will be provided regarding IELTS Exam which I have done on November 2009 due to the migration purpose.
.
I would like to sell it for AED. 200/- (equivalent to IRS. 2500/-). If anyone interested to buy (or refer someone else who is in needy), please email me ahmad.anver@gmail.com or contact directly on +971 50 7914039.

.
Looking forward to hearing from you at the earliest.
.
Thanking you.
.
Warm Regards,
.

Ahamed Anver
United Arab Emirates

Wednesday, December 30, 2009

2009 : THE DEATHS OF POPULAR PERSONS IN WORLDWIDE IN 2009


Courtesy : http://en.wikipedia.org/wiki/2009

JANUARY

January 1Nizar Rayan, Palestinian military and political leader (born 1959)
January 1Johannes Mario Simmel, Austrian writer (born 1924)
January 1Helen Suzman, South African activist and politician (born 1917)
January 12Claude Berri, French film director (born 1934)
January 12Arne Næss, Norwegian philosopher (born 1912)
January 13Patrick McGoohan, American-born British actor (born 1928)
January 14Ricardo Montalbán, Mexican-born American actor (born 1920)
January 15Said Seyam, Palestinian politician (born 1957)
January 16Andrew Wyeth, American painter (born 1917)
January 20Stéphanos II Ghattas, Egyptian Patriarch of Alexandria (born 1920)
January 25Mamadou Dia, 1st Prime Minister of Senegal (born 1910)
January 27John Updike, American writer (born 1932)
January 27R. Venkataraman, 8th President of India (born 1910)
January 30Ingemar Johansson, Swedish boxer (born 1932)

FEBRUARY
February 6James Whitmore, American actor (born 1921)
February 9Eluana Englaro, Italian patient in right-to-die case (born 1970)
February 25Philip José Farmer, American writer (born 1918)
February 27Manea Mănescu, Romanian Prime Minister (born 1916)

MARCH
March 2João Bernardo Vieira, President of Guinea-Bissau (born 1939)
March 14Alain Bashung, French singer, songwriter and actor (born 1947)
March 15Ron Silver, American actor and political activist (born 1946)
March 18Natasha Richardson, English actress (born 1963)
March 20Abdellatif Filali, 13th Prime Minister of Morocco (born 1928)
March 25Yukio Endo, Japanese gymnast (born 1937)
March 28Janet Jagan, American-born President of Guyana (born 1920)
March 29Maurice Jarre, French composer and conductor (born 1924)
March 31Raúl Alfonsín, 49th President of Argentina (born 1927)

APRIL
April 12Marilyn Chambers, American pornographic actress (born 1952)
April 12Eve Kosofsky Sedgwick, American social theorist (born 1950)
April 14Maurice Druon, French novelist (born 1918)
April 19J. G. Ballard, English novelist (born 1930)
April 22Ken Annakin, English film director (born 1914)
April 22Jack Cardiff, English cinematographer (born 1914)
April 25Beatrice Arthur, American actress (born 1922)
April 28Ekaterina Maximova, Soviet-Russian ballerina (born 1939)

MAY
May 2Augusto Boal, Brazilian theatre director (born 1931)
May 2Jack Kemp, American politician and football player (born 1935)
May 4Dom DeLuise, American actor and comedian (born 1933)
May 9Chuck Daly, American basketball coach (born 1930)
May 13Achille Compagnoni, Italian mountaineer (born 1914)
May 17Mario Benedetti, Uruguayan writer (born 1920)
May 18Velupillai Prabhakaran, Sri Lankan militant (born 1954)
May 19Robert F. Furchgott, American scientist (born 1916)
May 23Roh Moo-hyun, 16th President of South Korea (born 1946)
May 27Clive Granger, British economist (born 1934)
May 30Luís Cabral, 1st President of Guinea-Bissau (born 1931)
May 30Ephraim Katzir, 4th President of Israel (born 1916)
May 30Gaafar Nimeiry, 5th President of the Sudan (born 1930)

JUNE
June 2David Eddings, American author (born 1931)
June 3David Carradine, American actor (born 1936)
June 3Koko Taylor, American musician (born 1928)
June 6Jean Dausset, French immunologist and Nobel Prize laureate (born 1916)
June 8Omar Bongo, President of Gabon (born 1935)
June 12Félix Malloum, 3rd President of Chad (born 1932)
June 13Mitsuharu Misawa, Japanese professional wrestler (born 1962)
June 17Ralf Dahrendorf, German-British social theorist and politician (born 1929)
June 25Farrah Fawcett, American actress (born 1947)
June 25Michael Jackson, American performer and recording artist (born 1958)
June 30Pina Bausch, German choreographer (born 1940)

JULY
July 1Alexis Argüello, Nicaraguan boxer and politician (born 1952)
July 1Karl Malden, American actor (born 1912)
July 4Allen Klein, American businessman (born 1931)
July 6Vasily Aksyonov, Russian novelist (born 1932)
July 6Robert McNamara, 8th United States Secretary of Defense (born 1916)
July 17Meir Amit, Israeli general and politician (born 1921)
July 17Walter Cronkite, American newscaster (born 1916)
July 17Leszek Kołakowski, Polish philosopher (born 1927)
July 19Frank McCourt, Irish-American author (born 1930)
July 26Merce Cunningham, American choreographer (born 1919)
July 31Bobby Robson, English footballer and manager (born 1933)

AUGUST
August 1Corazon Aquino, 11th President of the Philippines (born 1933)
August 5Budd Schulberg, American screenwriter (born 1914)
August 6John Hughes, American film director and writer (born 1950)
August 6Willy DeVille, American singer-songwriter (born 1950)
August 11Eunice Kennedy Shriver, American founder of the Special Olympics (born 1921)
August 13Les Paul, American musician and inventor (born 1915)
August 18Kim Dae-jung, 15th President of South Korea (born 1925)
August 24Toni Sailer, Austrian alpine ski racer (born 1935)
August 25Ted Kennedy, American politician (born 1932)
August 26Abdul Aziz al-Hakim, Iraqi politician and theologian (born 1953)
August 27Sergey Mikhalkov, Soviet-Russian author (born 1913)

SEPTEMBER
September 8Aage Niels Bohr, Danish physicist and Nobel Prize laureate (born 1922)
September 11Juan Almeida, Cuban revolutionary and politician (born 1927)
September 11Yoshito Usui, Japanese manga artist (born 1958)
September 12Norman Borlaug, American agronomist and Nobel Prize laureate (born 1914)
September 12Jack Kramer, American tennis player (born 1921)
September 14Patrick Swayze, American actor and dancer (born 1952)
September 17Noordin Mohammad Top, Malaysian Islamist militant (born 1968)
September 18Irving Kristol, American writer and political commentator (born 1920)
September 23Ertuğrul Osman, 43rd Head of the Ottoman Dynasty (born 1912)
September 25Alicia de Larrocha, Spanish pianist (born 1923)
September 28Guillermo Endara, President of Panama, 1989-1994 (born 1936)
September 29Pavel Popovich, Soviet cosmonaut (born 1930)

OCTOBER
October 2Marek Edelman, Polish political and social activist (born 1922)
October 4Shōichi Nakagawa, Japanese politician (born 1953)
October 4Günther Rall, German fighter pilot (born 1918)
October 4Mercedes Sosa, Argentine singer (born 1935)
October 5Israel Gelfand, Soviet-American mathematician (born 1913)
October 7Irving Penn, American photographer (born 1917)
October 13Al Martino, American singer and actor (born 1927)
October 19Joseph Wiseman, Canadian actor (born 1918)
October 30Claude Lévi-Strauss, French anthropologist (born 1908)
October 31Qian Xuesen, Chinese scientist (born 1911)

NOVEMBER
November 3Francisco Ayala, Spanish novelist (born 1906)
November 8Vitaly Ginzburg, Russian physicist and Nobel Prize laureate (born 1916)
November 10Robert Enke, German footballer (born 1977)
November 15Patriarch Pavle, Patriarch of the Serbian Orthodox Church (born 1914)
November 15Pierre Harmel, 39th Prime Minister of Belgium (born 1911)
November 16Antonio de Nigris, Mexican footballer (born 1978)
November 20Lino Lacedelli, Italian mountaineer (born 1925)
November 21Konstantin Feoktistov, Soviet cosmonaut (born 1926)
November 24Samak Sundaravej, 25th Prime Minister of Thailand (born 1935)
November 30Milorad Pavić, Serbian writer (born 1929)

DECEMBER
December 3Richard Todd, Irish-born British actor (born 1919)
December 4Eddie Fatu, Samoan-American professional wrestler (born 1973)
December 4Vyacheslav Tikhonov, Soviet-Russian actor (born 1928)
December 5Alfred Hrdlicka, Austrian artist (born 1928)
December 5Otto Graf Lambsdorff, German politician (born 1926)
December 9Gene Barry, American actor (born 1919)
December 13Paul Samuelson, American economist and Nobel Prize laureate (born 1915)
December 16Roy E. Disney, American businessman (born 1930)
December 16Yegor Gaidar, Russian politician (born 1956)
December 17Jennifer Jones, American actress (born 1919)
December 19Hosein-Ali Montazeri, Iranian scholar and human rights activist (born 1922)
December 19Kim Peek, American savant (born 1951)
December 20Brittany Murphy, American actress (born 1977)
December 21Edwin G. Krebs, American biologist and Nobel Prize laureate (born 1918)
December 23Ngapoi Ngawang Jigme, Tibetan politician (born 1910)
December 24Rafael Caldera, 54th and 60th President of Venezuela (born 1916)
December 30Abdurrahman Wahid, 4th President of Indonesia (born 1940)

Courtesy : http://en.wikipedia.org/wiki/2009

========

OUR DEEPEST CONDOLENCES ON THEIR DEMISES.

MAY THEIR SOULS BE REST IN PEACE........!!!