Monday, October 18, 2010
அன்னையர் தினம்!
வரி ஏதுமில்லை வர்ணிக்க உனை;
நீ உண்ணாவிட்டாலும்
நான் உண்பதற்கு ஒடிவருவாய்
உணவோடு உன் அன்பையும் பிசைந்து!
அழுது வடியும் எனை வாகனத்தில்
ஏற்றிடுவாய் பள்ளிக்குச் செல்ல;
அனுப்பிவிட்டு அழுதுக்கொண்டிருப்பாய்
சிறுபிள்ளையாய் நீ!
தோளுக்கு மேல் வளர்ந்தாலும்
எண்ணையைக் கொண்டு என்னை
இழுப்பாய் வறண்டுப்போன என் சிகைக்காக;
ஈரமான உன் பாசத்தைக்கொண்டு!
என் மண நாளில் மனம்விட்டு அழுதாய்;
மகிழ்ச்சியில் மழலையாய்;
குலுங்கி அழும் உனக்கு நான் இன்னும் குழந்தையாக!
தினமும் கொண்டாட வேண்டிய உனை
தினம் வைத்துக் கொண்டாடுவதா;
இறுகிப்போன இதயத்திற்குதான்
வருடத்திற்கு முறை அன்னையர் தினம்!
புரிந்துக்கொண்டேன் உனை
நான் எனப் பொய்யாகச் சொன்னாலும்;
திணறித்தான் போவேன் புரியாத உன் பாசத்திற்கு!
Created & Composed by : யாசர் அரஃபாத்
Wednesday, October 13, 2010
COMMON WEALTH GAME - MEDALS LIST
LIST OF MEDALS AS ON 14-10-2010 @ 11:00 A.M.
For Updated List......
Visit
http://news.oneindia.in/sports/cwg2010/medal-tally.html
and Refresh (Ctrl-F5) the Page.
Visit
http://news.oneindia.in/sports/cwg2010/medal-tally.html
and Refresh (Ctrl-F5) the Page.
Sunday, October 10, 2010
கொசு விரட்டி… அபாயம்!!

வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கியாச்சு. இனி கொசுக்களின் காலம். எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, நம்முடைய ரத்தத்தை உறிஞ்சும். அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள்,
கிரீம் மற்றும் `மேட்’களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்! கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தெடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால், அவருக்கு ரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு, அது முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கெள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பல ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.
கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது. சரி… இதற்கு வேறு என்னதான் வழி? ஒரே வழிதான்…
அது --------> கொசுவலையை மட்டும் பயன்படுத்துவது தான்...!!
Thanks to : www.tamilcnn.com
Tuesday, September 21, 2010
THE RICHEST COUNTRY AMONGST THE WORLD
அமெரிக்காவில் வெளிவரும் குளோபல் பினான்ஸ் என்கிற பத்திரிகை உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலை இன்று (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது. ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை (GDP - Gross Domestic Product) (Definition : The total market value of all final goods and services produced in a country in a given year i.e. Country's Overall Economic Output) & GDI (Gross Domestic Income ) பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை எரிவாய்வு மூலம் கத்தார் நாட்டிற்க்கு கிடைத்துள்ளது. அந்த நாடு ஒவ்வரு வருடமும் 77 மில்லியன் டன் இயற்கை எரிவாய்வை உற்பத்தி செய்கிறது.
கத்தார் நாட்டின் ஜி.டி.பி மதிப்பு 90,149 டாலர்கள்.
பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது. 79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு 52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு 52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு 48,714 டாலர்கள்)பெற்றுள்ளது. ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது. அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு 38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை. 36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18வது இடத்தை பெற்றுள்ளது.
பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது. 79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு 52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு 52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு 48,714 டாலர்கள்)பெற்றுள்ளது. ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது. அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு 38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை. 36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18வது இடத்தை பெற்றுள்ளது.
முதல் பத்து இடத்தை பிடித்த நாடுகளும் அதன் ஜி.டி.பி மதிப்புகளும்:
1 கத்தார் 90,149 டாலர்கள்
2 லக்செம்பெர்க் 79,411 டாலர்கள்
3 நார்வே 52,964 டாலர்கள்
4 சிங்கப்பூர் 52,840 டாலர்கள்
5 ப்ரூனே 48,714 டாலர்கள்
6 அமெரிககா 47,702 டாலர்கள்
7 ஹாங்காங் 44,840 டாலர்கள்
8 சுவிட்சர்லாந்து 43,903 டாலர்கள்
9 ஹாலந்து 40,601 டாலர்கள்
10 ஆஸ்த்ரேலியா 39,841 டாலர்கள்
Thanks to TMB Group
=========
இந்த பட்டியலில் இந்தியா 128 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு 3,176 டாலர்கள்). எந்தப் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என்று கணித்து சொல்லுங்கள் பார்ப்போம்...?!!
ஊழல்?
எய்ட்ஸ்?
வறுமை?
மததுவேஷம்?
அரசியல் அநாகரிகம்?
Wednesday, September 15, 2010
பல பயனுள்ள டிப்ஸ் :-)

As received.......! Courtesy : TAFAREG-Group
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
- பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
- அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்
- இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
- மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
- சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
- பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
- ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
- துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
- நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
- தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
- ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
- நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
- மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
- பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
- நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
- தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
- மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
- பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
- மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
- நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
- குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
- நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
- தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
======= ம்ம்ம்... இங்கு உள்ள சில சமையலறை டிப்ஸ்கள் என்னைப் போன்ற கனவாண்களுக்கு...... ச்ச்சே.... கணவன்களுக்கு மிகவும் 'பய'னுள்ள (?!) தகவல்கள் தான். பலே... பலே..!!
:-)
Tuesday, September 07, 2010
Monday, August 30, 2010
BLOOD CANCER ?!
(click on name to get more info)
The above main medicine eradicates and cures Blood Cancers easily.
This medication is available for FREE OF COST
@
ADYAR CANCER INSTITUTE
Adyar, Chennai / Madras 600 020, Tamil Nadu, India
Tel. +91 44 4910754 or 4911526
For further clarification & details, contact
DR. MOHAMMED ASLAM
Cell # +91 9791071071
Chennai, Tamil Nadu
PLEASE SPREAD THIS NEWS
&
CREATE AWARENESS AGAINST
CANCER
COOPERATE & CREATE CLEVERLY TO
CANCEL CANCER
CLEARLY IN INDIA
=====================
இந்திய அரசியல்-வாதிகளின் இரத்தத்தில் புரையோடிய புற்றுநோய்
அரசியல்-வியாதிகள்
ஊழல்
லஞ்சம்
பதவி வெறி
சொத்துகுவிப்பு
குடும்ப அரசியல்
அதிகார துஷ்ப்பிரயோகம்
&
எக்ஸெட்ரா & எக்ஸெட்ரா....
Sunday, August 22, 2010
ONAM ASHAMSAGAL :-)
Read more about ONAM @ my last year post
ONAM... ഓണം
A COLOURFUL FESTIVAL IN KERALA...!
Wednesday, August 18, 2010
Monday, August 09, 2010
ரமலான் : தீமைகளின் கிளையுதிர் காலம்

(click on the image to view larger size)
அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!
ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!
ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!
உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!
ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!
எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!
ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!
ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!
ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!
ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்!
நன்றி : கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள்
(பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா)
=========
மாதம் என்பதை மதம் என வாசித்தாலும் இங்கு இஸ்லாத்தின் மகிமையை உணரலாம்.
Monday, July 26, 2010
Wednesday, July 21, 2010
இரண்டு அணா நாணயம்
நாம் உணரவேண்டிய 'புனித' பாடம்!
சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன், ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள். பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா. ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர், தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.
ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறி நின்றார். அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது. “என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதே” என்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.
பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார். மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார். பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார். அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன், இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டது” என்று கூறினார். அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.
அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069–ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம். அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது. அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார். அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069–ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்” என்று கூறினார். சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுது “இரண்டணா நாணயம்” என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார். உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார். அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய் “ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதை” எனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார். “ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார். “அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்று’ எண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்” என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார். “அன்றிரவு எங்களுக்கு உதவி புரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.” இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.
இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார். அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன். மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன். அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்” என்று கூறினார். அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின. “நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில் “பரக்கத்” செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு!!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.
(வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து.....)
நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )
Sunday, July 18, 2010
UNIVERSITIES IN TAMIL NADU
List of Universities in Tamil Nadu offering Regular & Distance Education
Alagappa University, Sivanagar
Alagappa University - Directorate of Distance Education, Sivanagar
AMET University Chennai
Amrita Vishwa Vidyapeetham, Coimbatore
Anna University Chennai
Anna University Chennai - Centre for Distance Education
Anna University Coimbatore
Anna University Coimbatore - Directorate of Online & Distance Education
Anna University Trichy, Tiruchi
Annamalai University, Annamalai Nagar
Annamalai University - Directorate of Distance Education, Annamalai Nagar
Avinashilingam University for Women, Coimbatore
Bharath University, Chennai
Bharathidasan University, Tiruchi
Bharathidasan University - Centre for Distance Education, Tiruchi
Bharathiar University, Coimbatore
Bharathiar University - School of Distance Education, Coimbatore
Chettinad University, Kancheepuram
Dakshina Bharti Hindi Prachar Sabha, Chennai
Dr Ambedkar Law University, Chennai
Dr MGR Educational and Research Institute, Chennai
Gandhigram Rural University, Dindigul
Gandhigram Rural University - Distance Education Centre, Dindigul
Hindustan Institute of Technology & Science (HITE), Chennai
Kalasalingam University, Virudhunagar
Karunya University, Coimbatore
Karpagam University, Coimbatore
Manonmaniam Sundaranar University (MSU), Tirunelvali
Manonmaniam Sundaranar University - Directorate of Distance and Continuing Education, Tirunelvali
Madurai Kamraj University (MKU), Madurai
Madurai Kamraj University - Directorate of Distance Education (MKU-DDE), Madurai
Meenakshi University, Chennai
Mother Theresa Women's University, Kodaikanal
National Institute of Technology Tiruchirappalli (NITT)
PRIST University, Thanjavur
PRIST University Centre for Distance Education, Thanjavur
Periyar University
Periyar Maniammai University, Thanjavur
Periyar Institute of Distance Education (PRIDE), Salem
SASTRA University, Thanjavur
Saveetha University, Chennai
Sathyabama University, Chennai
SRM University, Kancheepuram
Sri Chandrasekharendra Saraswathi Viswa Mahavidyalaya, Kancheepuram
Sri Ramachandra Medical College & Research Institute, Chennai
St Peter's University, Chennai
St Peters Institute of Distance Education, Chennai
Tamil Nadu Dr Ambedkar Law University, Chennai
Tamil Nadu Dr MGR Medical University, Chennai
Tamil Nadu Open University (TNOU), Chennai
Tamil Nadu Physical Education and Sports University, Chennai
Tamil Nadu Physical Education and Sports University Directorate of Distance Education, Chennai
Tamil Nadu Agricultural University, Coimbatore
Tamil Nadu Agricultural University - Directorate of Open and Distance Learning, Coimbatore
Tamil University, Thanjavur
Tamilnadu Veterinary & Animal Sciences University, Chennai
Thiruvalluvar University, Vellore
University of Madras (UnOM), Chennai
University of Madras - Institute of Distance Education, Chennai
VELs University, Chennai
Vellore Institute of Technology, Vellore
Vinayaka Missions University, Salem
Vinayaka Missions University Directorate of Distance Education, Salem
Monday, July 12, 2010
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி விருதுகள்
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி விருதுகள்
ஜெர்மனியின் இளம் வீரர் தாமஸ் முல்லருக்கு நேற்று இரண்டு விருதுகள் கிடைத்தன. சிறந்த இளம் வீரருக்கான விருது மற்றும் கோல்டன் பூட் விருது ஆகியவற்றை அவர் தட்டிச் சென்றார்.
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்டன.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் இந்த விருதுகளுக்குக் கடும் போட்டி நிலவி வந்தது. ஜெர்மனியின் குளோஸ், ஸ்பெயினின் வில்லா உள்ளிட்ட சிலர் இந்த விருதுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
சிறந்த வீரர் டியகோ போர்லான்
சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை உருகுவே வீரர் டியகோ போர்லான் தட்டி்ச் சென்றார். உருகுவேயின் சிறப்பான ஆட்டத்திற்கு போர்லானின் பங்கு மிகப் பெரியது. இந்தத் தொடரில் இவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார்.
2வது இடம் நெதர்லாந்தின் ஸ்னீடருக்கும், 3வது இடம் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கும் கிடைத்தது.
அதிக கோல்கள் அடித்தவர் தாமஸ் முல்லர்
அதிக கோல்கள் அடித்த வீரராக ஜெர்மனியின் தாமஸ் முல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் அவர் ஐந்து கோல்கள் அடித்திருந்தார். இதுதவிர 3 கோல்கள் கிடைக்கவும் இவர் காரணமாக இருந்தார்.
இதன் காரணமாக டேவிட் வில்லா, ஸ்னீடரை முந்திக் கொண்டு விருதை தட்டிச் சென்றார். இந்த இருவரும் கூட தலா ஐந்து கோல்களைப் போட்டிருந்தனர். இருப்பினும் தத்தமது அணிகளுக்கு தலா ஒரு கோல் கிடைக்க மட்டுமே இவர்கள் உதவியாக இருந்ததால், முல்லருக்கு விருது கிடைத்தது.
சிறந்த கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ்
சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருதை தட்டிச்சென்றார் ஸ்பெயின் கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ். இந்தத் தொடரில் ஸ்பெயின் அணி 2 கோல்களை மட்டுமே வாங்கியது. இந்த சிறப்புக்கு இகர் கேசில்லாஸின் சிறப்பான செயல்பாடே காரணம்.
சுவிட்சர்லாந்திடம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது ஸ்பெயின். இதனால் கேசில்லாஸ் விமர்சனத்துக்குள்ளானார். ஆனால் அடுத்து வந்த அத்தனை போட்டிகளிலும் ஸ்பெயின் பிரமாதமாக ஜெயித்தது. ஒரு கோல் கூட ஸ்பெயினுக்கு எதிராக விழாமல் அட்டகாசமாக கீப்பிங்கை செய்தார் இகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இளம் வீரர் தாமஸ் முல்லர்
சிறந்த இளம் வீரருக்கான விருதும் ஜெர்மனியின் முல்லருக்கே கிடைத்தது. ஜெர்மனி அணி 3வது இடம் வரை வந்ததற்கு முல்லரின் ஆட்டமே முக்கிய காரணம். இந்தத் தொடர் முழுவதும் முல்லர் படு விறுவிறுப்பான ஆட்டத்தைக் காட்டி அசத்தியிருந்தார்.
நேர்மையான ஆட்டம் தந்த அணி ஸ்பெயின்
சிறந்த ஃபேர்பிளே விருது ஸ்பெயின் அணிககே கிடைத்தது.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் இனியஸ்டா
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்பெயினின் ஆன்டிரஸ் இனியஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போட்ட கோல்தான் ஸ்பெயினுக்கு கோப்பையை வாங்கித் தந்தது என்பதால் இந்தப் பரிசு.
Courtesy : That's Tamil . com
Courtesy : That's Tamil . com
Wednesday, April 28, 2010
அவன் தூயவன்
அந்தரத்திலே உலகம்..!
ஆளில்லா வானவெளி...!
எங்கிருந்து வந்தோம்....?!
எங்கு செல்வோம்....?!
நம் கண்களுக்கு தெரியவில்லை.....!!
இங்கு காற்றில் மிதக்க வைத்தான்....!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்....!
கருவறை நோக்கிய பயணத்தில்.....!
கோடி போட்டியாளரில்
நம்மை முடிசூட வைத்தான்....!
அட்டை பூச்சி போல நாம்
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்...!
நம்மை இரத்த கட்டியாக்கினான்....!
பின் சதைக்கட்டியாகினான்.....!
பின் எலும்பு கொண்டு போற்றினான்...!
நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது,
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்....!
மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான.....!
நம் தாயின் பாலை நமக்கு
இனிப்புடன் உற்பத்தி செய்தான்....!
அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்....!
கோடையில் குளிர்சாதன பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்....!
இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்....!
உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை என்கிறாயே..!
நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான்.
மனிதனே.......!
அந்த ஒருவனை மறந்துவிடாதே.....!
அவன் ஒருவன்....!
அவன் தனித்தவன்.......!
சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன..!!
விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!
விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்...!
உலகை அடக்கி ஆள்பவன்....!
அவன் மகா தூயவன்.....!!
எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே......!!!
நன்றி: தஃபாரக் குழுமம்
Monday, April 26, 2010
Sunday, April 11, 2010
APPLE A DAY... CANCELS CANCER AWAY :-)
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் புற்றுநோயிலிருந்து 35 சதவீதம் வரை பாதுகாப்பு பெறுகிறார்கள். தினசரி ஒன்றுக்கு மேல் ஆப்பிள் பழம் சாப்பிடுகிறர்களுக்கு 50 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. ஆப்பிள் பழத்தின் தசைப் பற்றான பாகத்தைவிட அதன் தோல் 5 மடங்கு புற்றுநோய் எதிர்ப்பு திறன் பெற்றுள்ளது என போலந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
போலந்து விஞ்ஞானிகளின் ஆய்வினையும் அதன் கண்டுபிடிப்புகளையும் விளக்கும் கட்டுரை “கான்சர் பிரிவென்சன்" இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரை விவரம் வருமாறு:
ஆப்பிள் பழம் உடல் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்ற கருத்து உலகமெங்கும் பரவி உள்ளது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறவர் தன் வீட்டுக்கு மருத்துவர் வரவிடாமல் தடுத்துவிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் 592 பேரைப் பேட்டி கண்டு போலந்து விஞ்ஞானிகள் பேசினர்.
அந்த புற்று நோயாளிகளின் உணவுப் பழக்கங்கள் குறித்தும் விசாரித்து அறிந்தனர். மருத்துவ மனையில் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் புற்று நோய¢ பாதிக்காத 765 நோயாளிகளையும் அவர்கள் கண்டு பேசினார்கள்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்தில் 9.5 முறை ஆப்பிள் பழத்துண்டுகள் சாப்பிட்டதாகக் கூறினார்கள்.
புற்று நோயால் பாதிக்கப்படாதவர்கள் ஒரு வார காலத்தில் 11 முறை ஆப்பிள் துண்டுகள் சாப்பிட்டுள்ளனர். தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவோர் 35 சதவீத பாதுகாப்பை பெறுகிறார்கள். ஒரே நாளில் ஒரு பழத்துக்கு மேல் ஆப்பிள் சாப்பிட்டவர்கள் 50 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்பை பெறுகிறார்கள். இத்தகைய பாதுகாப்பை மனிதர்களுக்கு வழங்குவது ஆப்பிள் பழத்தில் உள்ள ஃபிளாவினாய்ட்ஸ் என்ற சத்துப் பொருள்தான்.
இந்த சத்துப் பொருள் ஆப்பிள் தோலிலும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஆப்பிள் பழத்தின் தசைப்பற்றான பகுதியைவிட தோலில் 5 மடங்கு அதிகம் ஃபிளாவினாய்ட்ஸ் உள்ளன. எனவே ஆப்பிள் பழத்தை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். தோலை சீவி எறிந்துவிட்டால் ஆப்பிள் பழம் தரும் கான்சர் பாதுகாப்பு உரிய அளவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
A for APPLE &
A for AAROKYAM
A for AMAITHI
A for AANANTHAM :-) A for Adirai's Amazing Anwar :-)
Wednesday, March 31, 2010
காய்... கறி... கனி...
காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.
எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.
தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
உணவே மருந்து... மருந்தே உணவு.
Saturday, March 27, 2010
Thursday, March 25, 2010
EARTH HOUR 2010
MARCH 27, 2010 - SATURDAY 20:30 PM
By turning off their non-essential lighting for one hour—Earth Hour— UAE citizens will join millions of people around the world in their commitment to fight climate change and send a message to leaders that the time to act is now.
Ultimately, the UAE Earth Hour 2010 seeks to raise awareness about climate change and encourage the UAE residents, business leaders and government officials to take action and start planning a reduction in CO2 emissions.
With every flick of a light switch, a vote is cast for lasting action on the escalating climate crisis.
On March 27th at 8:30 p.m. local time, Earth Hour will cascade around the globe - from time zone to time zone - uniting the planet under a single, simple, call to action.
Supporting Firms in UAE
• Abu Dhabi Transport Authority
• Abu Dhabi Municipality
• HSBC Bank Middle East Ltd
• Jumeirah Beach Hotel
• Hilton Ras Al Khaimah Hotel
• Grosvenor House Dubai
• Department of Transport
• Dubai eGovernment
• Dubai Holding
• Dubai Chamber of Commerce
• Enpark
• Environment Agency - Abu Dhabi
• Emirates Wildlife Society - WWF
• Dubai Police
• Fairmont Dubai
• Schneider Electric FZE
• Le Royal Meredien Beach Resort & Spa Dubai
• Kraft Foods
• Khidmah LLC
• Trane Middle East
• Dubai Silicon Oasis Authority
• Sharjah Megamall
• Sharjah Aquarium
• Sharjah Science Museum
• Coca Cola Middle East
• Dubai Aluminium Company Limited
• ADGAS
• ADIA
• ADWEC
• AFC
• Abu Dhabi Ports Company
• Abu Dhabi Motorsport Management - Yas Marina Circuit
• Al Manzil and Qamardeen Hotels
• Aldar Properties PJSC
• Aldar HQ building
• Al Qasba
• Al Qasr
• Beach Kiosk
• Better Homes LLC
• Burj Al Arab
• BUNDUQ Oil Company Ltd.
• C&I
• Canon Middle East
• Centre of Ambulance Services
• Clifford Chance
• Corporate Office
• DAM Villas
• Department of Tourism and Commerce Marketing
• Department of Tourism and Commerce Marketing Dubai
• DNVPS
• Dome International LLC
• Dubai eGovernment
• Dubai First Bank
• Dubai Land Department
• Dubai Municipality
• Dubai Properties Group
• DPG Customers
• DPG Suppliers
• DPG Investors
• DPG Employees
• Dubai Sports Council
• Dubai World Trade Centre
• Dulsco
• Eco-Chicks
• Edama Consulting
• Emirates Academy
• Emirates Diving Association
• Emirates Exhibition Services
• Emirates Group
• Emirates Palace
• Enviromena Power Systems
• Environment Friends Society
• Etihad Airways
• Etisalat Head Office – Abu Dhabi
• Etisalat Dubai
• Etisalat Fujairah
• Etisalat Sharjah
• Etisalat Ras Al Khaimah
• Fairmont Bab Al Bahr
• Farah Leisure Parks Management
• First Select International
• Gartner Gulf
• GEMS Education
• General Electric
• Global Carers
• Hamham School
• Health Club
• Heilbronn
• Hilton Dubai Jumeirah
• Hyatt Regency Dubai
• Ibis Al Barsha
• Imdaad LLC
• India Club
• Jones Lang LaSalle
• Jumeirah Group
• Jumeirah Bab Al Shams
• Jumeirah Emirates Towers
• Jumeirah Living World Trade Centre Residence
• Jumeirah Restaurants
• KEO International
• Knowledge and Human Development Authority
• KONE Middle East
• Le Meridien Al Aqah Beach Hotel
• Le Meridien Al Aqah Beach Resort Fujairah
• Lotus Grand Hotel Apartments
• Madinat Jumeirah
• MAF Dalkia Middle East
• Malakiya Villa
• Masdar
• Masdar Institute of Science and Technology
• Media One Hotel
• Mina Al Salam
• myfootprint.ae
• National Bank of Abu Dhabi
• Nokia MEA
• Noor Islamic Bank
• NORR Group Consultants Int'l
• Pai Thai
• Papillon Beauty Salon
• Pier Chic
• Polarcus
• Radisson Blu Hotel Dubai Media City
• Radisson Blu Residence, Dubai Marina
• Raffles Dubai
• Ready Mix Beton
• Rivington
• Rota
• SAI
• Segretto
• Sharjah Science Museum
• Sheraton Abu Dhabi Hotel & Resort
• Sheraton Jumeirah Beach Resort & Towers
• Spa
• TNH
• TECOM Investments
• The Yas Hotel
• Traders Hotel, Dubai
• Twofour54
• Union National Bank
• Urbano
• Wasl Asset Management Group
• Wild Wadi
DO SUPPORT PERSONALLY IN ORDER TO SAVE OUR EARTH FOR OUR NEXT GENERATION
பெற்றோரை போற்றுவோம்...... &
நம் பரம்பரையை பெற்ற & பெறப் போகும் இந்த பூமியை பாதுகாப்போம்...!!!
Monday, March 22, 2010
JOB PLACEMENT :-)
HOW TO RECRUIT THE RIGHT PERSON FOR THE JOB?
Put about 100 bricks in some particular order in a closed room with an open window. Then send 2 or 3 candidates in the room and close the door.
Leave them alone and come back after 6 hours and then analyze the situation.
If they are counting the bricks, Put them in the ACCOUNTS DEPT.
If they are recounting them., Put them in AUDITING
If they have messed up the whole place with the bricks, Put them in ENGINEERING.
If they are arranging the bricks in some strange order, Put them in PLANNING
If they are throwing the bricks at each other, Put them in OPERATIONS
If they are sleeping, Put them in SECURITY
If they have broken the bricks into pieces, Put them in INFORMATION TECHNOLOGY
If they are sitting idle, Put them in HUMAN RESOURCES
If they say they have tried different combinations, yet not a brick has been moved, Put them in SALES
If they have already left for the day, Put them in MARKETING
If they are staring out of the window, Put them on STRATEGIC PLANNING
And then last but not least.........
If they are talking to each other and not a single brick has been removed, Congratulate them and put them in TOP MANAGEMENT
In which Department you are working at Present? :-))
Put about 100 bricks in some particular order in a closed room with an open window. Then send 2 or 3 candidates in the room and close the door.
Leave them alone and come back after 6 hours and then analyze the situation.
If they are counting the bricks, Put them in the ACCOUNTS DEPT.
If they are recounting them., Put them in AUDITING
If they have messed up the whole place with the bricks, Put them in ENGINEERING.
If they are arranging the bricks in some strange order, Put them in PLANNING
If they are throwing the bricks at each other, Put them in OPERATIONS
If they are sleeping, Put them in SECURITY
If they have broken the bricks into pieces, Put them in INFORMATION TECHNOLOGY
If they are sitting idle, Put them in HUMAN RESOURCES
If they say they have tried different combinations, yet not a brick has been moved, Put them in SALES
If they have already left for the day, Put them in MARKETING
If they are staring out of the window, Put them on STRATEGIC PLANNING
And then last but not least.........
If they are talking to each other and not a single brick has been removed, Congratulate them and put them in TOP MANAGEMENT
In which Department you are working at Present? :-))
Thursday, March 11, 2010
Dubai International PEACE Convention 2010

Visit & Register @ www.peaceconvention.com
Visit & Gather @ Dubai Airport Expo.
Gather good speaches, apply in your life, do good deeds and see you @ Jannath Al Firdouz
Wednesday, March 10, 2010
JOB VACANCIES IN GULF REGION
Technical Manager Required - Dubai>>
http://www.jobshob.org/2010/03/technical-manager-required-dubai.html
Sr. Petroleum Engineer Required - Abu Dhabi>>
http://www.jobshob.org2010/03/sr-petroleum-engineer-required-abu.html
Radio Active Analyst Required - Abu Dhabi>>
http://www.jobshob.org/2010/03/radio-active-analyst-required-abu-dhabi.html
Stainless Steel Work - Fabricator - Dubai>>
http://www.jobshob.org/2010/03/stainless-steel-work-fabricator-dubai.html
Quality Assurance Specialists - Abu Dhabi>>
http://www.jobshob.org/2010/03/quality-assurance-specialists-abu-dhabi.html
Project Controls Planners, And Quantity Surveyors Required - Abu Dhabi>>
http://www.jobshob.org/2010/03/project-controls-planners-cost.html
F & B MANAGER Required in Hospitality Business - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/f-b-manager-required-in-hospitality.html
Marketing Professionals and Customer Service Agents Required in Call Center - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/marketing-professionals-and-customer.html
Multiple Positions in Fara'a Integrated Construction Group - UAE>>
http://www.jobshob.org/2010/03/multiple-positions-in-faraa-integrated.html
Head of Research and Analysis - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/head-of-research-and-analysis-saudi_03.html
Jobs in Al-Wisam International School - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/jobs-in-al-wisam-international-school.html
Multiple Positions in Construction Business - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/multiple-positions-in-construction.html
Professionals Required in Steel Fabrication Company - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/professionals-required-in-steel.html
Chief Financial Officer, Accountant and Transport In-charge Required - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/chief-financial-officer-accountant-and.html
Executive Secretary Required - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/executive-secretary-required-saudi.html
Multiple Jobs in Construction Company - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/multiple-jobs-in-construction-company.html
Assistant Receptionist Required in Diplomatic Mission - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/assistant-receptionist-required-in.html
Manager of Organization and Methods - Qatar>>
http://www.jobshob.org/2010/03/manager-of-organization-and-methods.html
IT Security and Compliance Officer - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/it-security-and-compliance-officer.html
Middle East Oil & Gas Associate - UAE>>
http://www.jobshob.org/2010/03/middle-east-oil-gas-associate-uae.html
Senior Relationship Manager - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/3/senior-relationship-manager-saudi.html
Managing Director of Corporate Coverage - UAE>>
http://www.jobshob.org/2010/03/managing-director-of-corporate-coverage.html
Head of Research and Analysis - Saudi Arabia>>
http://www.jobshob.org/2010/03/head-of-research-and-analysis-saudi.html
Multiple Position in Building Construction Company - Bahrain>>
http://www.jobshob.org/2010/03/multiple-position-in-building.html
Labels:
JOB OPENINGS IN GULF COUNTRIES
Wednesday, February 24, 2010
கற்க..... கசடற...!!

சென்னைக்கு அருகில் இருக்கும் ஆவடியில் நந்தகுமாரின் இளமைப்பிராயம் கழிந்தது. பண்ணிரண்டு வயது. ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். பள்ளிக்குச் செல்வது வேப்பங்காயாய் கசந்தது. கற்கும் பாடங்கள் நினைவில் நிற்பதில்லை. கற்றல் குறைபாடு அவருக்கு தீராதப் பிரச்சினையாக இருந்தது. ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா (Dyselxia) என்று அழைக்கப்படும் இந்த உளவியல் பிரச்சினை கற்றல் தொடர்பானது.
.
பள்ளிக்குச் செல்வதை நிறுத்தும் மாணவர்கள் வழக்கமாக நம்மூரில் என்னவெல்லாம் செய்வார்களோ, அதையே தான் நந்தாவும் செய்தார். லாட்டரி டிக்கெட் விற்றார். வீடியோ கடையில் எடுபிடியாக வேலை பார்த்தார். மெக்கானிக் ஷெட்டில் கையில் க்ரீஸ் அழுக்கோடு நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருந்தது. ஜெராக்ஸ் கடையில் சில காலம். இப்படியாக எதிர்காலம் குறித்த எந்த தெளிவான முடிவும் அவரிடம் இல்லாமல் வாழ்க்கை சக்கரம் சுற்றிக் கொண்டிருந்தது.
.
பிரச்சினை நந்தகுமாரோடு முடிந்துவிட்டிருந்தால் தேவலை. நந்தகுமாருக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. முன் ஏர் எப்படிப் போகுமோ, அப்படித்தான் பின் ஏரும் போகும் என்பது ஊர்களில் பேசப்படும் சொலவடை. நந்தகுமாரைப் பின்பற்றி அவரது தங்கைகளும், தம்பியும் மிகச்சரியாக, சொல்லி வைத்தாற்போல் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள். ஒரு குடும்பத்தின் நான்கு வாரிசுகளுமே கல்வியை பாதியில் விட்டால், சமூகம் அந்தக் குடும்பத்தை எப்படிப் பார்க்கும்? இத்தனைக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத அளவுக்கு வறுமையெல்லாம் அக்குடும்பத்தில் இல்லை. தெருப்பிள்ளைகள் இவர்களோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. “அந்தப் பசங்க மக்குப்பசங்க. அவங்களோட சேர்ந்தா நீங்களும் மக்காயிடுவீங்க!” உற்றாரும், உறவினரும் கேலியாகவும், கிண்டலாகவும் நால்வரையும் பார்த்தார்கள்.
பிரச்சினை நந்தகுமாரோடு முடிந்துவிட்டிருந்தால் தேவலை. நந்தகுமாருக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. முன் ஏர் எப்படிப் போகுமோ, அப்படித்தான் பின் ஏரும் போகும் என்பது ஊர்களில் பேசப்படும் சொலவடை. நந்தகுமாரைப் பின்பற்றி அவரது தங்கைகளும், தம்பியும் மிகச்சரியாக, சொல்லி வைத்தாற்போல் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள். ஒரு குடும்பத்தின் நான்கு வாரிசுகளுமே கல்வியை பாதியில் விட்டால், சமூகம் அந்தக் குடும்பத்தை எப்படிப் பார்க்கும்? இத்தனைக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத அளவுக்கு வறுமையெல்லாம் அக்குடும்பத்தில் இல்லை. தெருப்பிள்ளைகள் இவர்களோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. “அந்தப் பசங்க மக்குப்பசங்க. அவங்களோட சேர்ந்தா நீங்களும் மக்காயிடுவீங்க!” உற்றாரும், உறவினரும் கேலியாகவும், கிண்டலாகவும் நால்வரையும் பார்த்தார்கள்.
.
புத்தருக்கு ஞானம் கிடைக்க போதிமரம் கிடைத்தது. போதிமரத்தடியில் உட்காராமலேயே திடீரென ஒருநாள் புத்தர் ஆனார் நந்தகுமார். பள்ளிக்குப் போகாமலேயே பிரைவேட்டாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் என்ன? நண்பர் ஒருவர் அதுபோல எழுதலாம் என்று ஆலோசனை சொல்ல எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்தார் நந்தா. இந்த வெற்றி தந்த பெருமிதம் பத்தாம் வகுப்புத் தேர்வையும் எழுதவைத்தது. இதுவும் பாஸ். “அடடே. எல்லாமே ஈஸியா இருக்கே? பள்ளியிலேயே சேர்ந்து படிக்கலாம் போலிருக்கே?” என்று எண்ணினார் நந்தா. எட்டாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் பிரைவேட்டாக எழுதிய அவரை +1 வகுப்பில் சேர்க்க பள்ளிகள் மறுத்தன. போராடிப் பார்த்தார். முடியவில்லை. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல +2 தேர்வையும் பிரைவேட்டாகவே எழுதி வென்றார் நந்தா.
புத்தருக்கு ஞானம் கிடைக்க போதிமரம் கிடைத்தது. போதிமரத்தடியில் உட்காராமலேயே திடீரென ஒருநாள் புத்தர் ஆனார் நந்தகுமார். பள்ளிக்குப் போகாமலேயே பிரைவேட்டாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் என்ன? நண்பர் ஒருவர் அதுபோல எழுதலாம் என்று ஆலோசனை சொல்ல எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்தார் நந்தா. இந்த வெற்றி தந்த பெருமிதம் பத்தாம் வகுப்புத் தேர்வையும் எழுதவைத்தது. இதுவும் பாஸ். “அடடே. எல்லாமே ஈஸியா இருக்கே? பள்ளியிலேயே சேர்ந்து படிக்கலாம் போலிருக்கே?” என்று எண்ணினார் நந்தா. எட்டாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் பிரைவேட்டாக எழுதிய அவரை +1 வகுப்பில் சேர்க்க பள்ளிகள் மறுத்தன. போராடிப் பார்த்தார். முடியவில்லை. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல +2 தேர்வையும் பிரைவேட்டாகவே எழுதி வென்றார் நந்தா.
.
இப்போது கல்லூரியில் சேர்ந்து பயிலும் ஆசை நந்தாவுக்குள் முளைவிட்டிருந்தது. பள்ளியில் படிக்காமல் எட்டு, பத்து, பண்ணிரெண்டு என்று எல்லா வகுப்புகளையுமே பிரைவேட்டாக தேறியிருந்த நந்தாவை சேர்த்துக்கொள்ள கல்லூரிகளுக்கு மனமில்லை. கல்லூரிதோறும் கால்கடுக்க ஏறி, இறங்கி கடைசியாக வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆங்கிலம் இளங்கலை படிப்பை படிக்க ஆரம்பித்தார் நந்தா. அம்பேத்கர் கல்லூரியில் இளங்கலை முடிந்ததும் சென்னை மாநிலக்கல்லூரியில் அதே ஆங்கில இலக்கியத்தை முதுகலையாக கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போது கல்வி தவிர்த்து, என்.சி.சி. போன்ற விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.
இப்போது கல்லூரியில் சேர்ந்து பயிலும் ஆசை நந்தாவுக்குள் முளைவிட்டிருந்தது. பள்ளியில் படிக்காமல் எட்டு, பத்து, பண்ணிரெண்டு என்று எல்லா வகுப்புகளையுமே பிரைவேட்டாக தேறியிருந்த நந்தாவை சேர்த்துக்கொள்ள கல்லூரிகளுக்கு மனமில்லை. கல்லூரிதோறும் கால்கடுக்க ஏறி, இறங்கி கடைசியாக வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆங்கிலம் இளங்கலை படிப்பை படிக்க ஆரம்பித்தார் நந்தா. அம்பேத்கர் கல்லூரியில் இளங்கலை முடிந்ததும் சென்னை மாநிலக்கல்லூரியில் அதே ஆங்கில இலக்கியத்தை முதுகலையாக கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போது கல்வி தவிர்த்து, என்.சி.சி. போன்ற விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.
.
முதுகலைப்பட்டம் பெற்ற பிறகும் ‘என்னவாக ஆகப்போகிறோம்?’ என்று எந்த முன்முடிவும் நந்தாவிடம் இல்லை. என்.சி.சி.யில் இருந்ததால் இராணுவம் தொடர்பான பணி எதிலாவது சேரலாம் என்று நினைத்தார். சென்னையில் இராணுவ அதிகாரிகளை உருவாக்கும் ஆபிஸர்ஸ் டிரைனிங் அகாடமி (OTA)-யில் சேர்ந்தார். இடையில் ஒரு விபத்து ஏற்பட, அந்தப் படிப்பையும் பாதியில் விட வேண்டியதாயிற்று.
முதுகலைப்பட்டம் பெற்ற பிறகும் ‘என்னவாக ஆகப்போகிறோம்?’ என்று எந்த முன்முடிவும் நந்தாவிடம் இல்லை. என்.சி.சி.யில் இருந்ததால் இராணுவம் தொடர்பான பணி எதிலாவது சேரலாம் என்று நினைத்தார். சென்னையில் இராணுவ அதிகாரிகளை உருவாக்கும் ஆபிஸர்ஸ் டிரைனிங் அகாடமி (OTA)-யில் சேர்ந்தார். இடையில் ஒரு விபத்து ஏற்பட, அந்தப் படிப்பையும் பாதியில் விட வேண்டியதாயிற்று.
.
அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து அறிந்தார். அதுவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்றால் பட்டப்படிப்பு போல மூன்று வருடங்கள் படிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எல்லோரையும் போல நந்தாவும் நினைத்திருந்தார். சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டித்தேர்வு போதுமானது என்ற விஷயமே நந்தாவை மிகவும் கவர்ந்தது.
இன்று நந்தகுமார், ஐ.ஆர்.எஸ், சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தில் துணை ஆணையளராகப் பணிபுரிகிறார். ஒரு காலத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் சேர்க்கத் தயங்கிய மாணவர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, நாட்டை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்.
அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து அறிந்தார். அதுவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்றால் பட்டப்படிப்பு போல மூன்று வருடங்கள் படிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எல்லோரையும் போல நந்தாவும் நினைத்திருந்தார். சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டித்தேர்வு போதுமானது என்ற விஷயமே நந்தாவை மிகவும் கவர்ந்தது.
இன்று நந்தகுமார், ஐ.ஆர்.எஸ், சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தில் துணை ஆணையளராகப் பணிபுரிகிறார். ஒரு காலத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் சேர்க்கத் தயங்கிய மாணவர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, நாட்டை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்.
.
முப்பத்து மூன்று வயதான நந்தகுமாரை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தோம். “எனக்கே எல்லாமே ஆச்சரியமாதாங்க இருக்கு. திடீருன்னு மறுபடியும் படிக்கணும்னு ஆர்வம் வந்தது. விடாமுயற்சியோடு, கடுமையாகப் படித்தேன்னு எல்லாம் சொல்லமுடியாது. சின்சியரா படிச்சேன். அவ்ளோதான்” என்று அளவாகப் புன்னகைக்கிறார்.
முப்பத்து மூன்று வயதான நந்தகுமாரை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தோம். “எனக்கே எல்லாமே ஆச்சரியமாதாங்க இருக்கு. திடீருன்னு மறுபடியும் படிக்கணும்னு ஆர்வம் வந்தது. விடாமுயற்சியோடு, கடுமையாகப் படித்தேன்னு எல்லாம் சொல்லமுடியாது. சின்சியரா படிச்சேன். அவ்ளோதான்” என்று அளவாகப் புன்னகைக்கிறார்.
.
“கல்வி மிக மிக முக்கியமானதுங்க. ஆனா நம்மோட கல்விமுறையிலே எனக்கு கொஞ்சம் அதிருப்தி இருக்கு. நம்ம கல்விமுறை படிப்பாளிகளை உருவாக்குதே தவிர, அறிவாளிகளை உருவாக்குவதாக தெரியவில்லை. மாணவர்கள் கல்வி என்றால் கசப்பானது என்று நினைக்காமல் ஆர்வத்தோடு பள்ளிக்கு வரும் வகையில் நம்ம கல்விமுறையை மாற்றணும். கொடுமை பாருங்க. நான் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தயாராகும்போது படிச்சதெல்லாம் ஏற்கனவே பள்ளியில் படிச்சதா தானிருக்கு. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை வேறு வேறு வடிவங்களில் படிச்சிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. ஒருவன் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த வயதுக்கு தேவையான வாழ்க்கைக்கல்வி இன்றைய சூழலில் அவசியம்! அப்புறம், சிவில் சர்வீஸ் எக்ஸாம்னாலே எல்லோரும் ஏதோ பெரிய பட்டப்படிப்பு மாதிரி பயப்படுறாங்க. இது ஒரு போட்டித்தேர்வு, பட்டப்படிப்பு அல்ல. பயமில்லாம நிறைய பேர் இந்த தேர்வுகளை எழுதணும். நம்ம இளைய தலைமுறை எதிர்ப்பார்க்கிற அட்வெஞ்சர் கேரியரா நிச்சயமா சிவில் சர்வீஸ் அமையும். ஆறாவது ஊதியப்பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்த்துக்கு அப்புறமா நல்ல சம்பளமும் கிடைக்குதுங்க!” என்கிறார். கற்றல் தொடர்பான டிஸ்லெக்சியா பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட வென்றுவிட்டேன் என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.
“கல்வி மிக மிக முக்கியமானதுங்க. ஆனா நம்மோட கல்விமுறையிலே எனக்கு கொஞ்சம் அதிருப்தி இருக்கு. நம்ம கல்விமுறை படிப்பாளிகளை உருவாக்குதே தவிர, அறிவாளிகளை உருவாக்குவதாக தெரியவில்லை. மாணவர்கள் கல்வி என்றால் கசப்பானது என்று நினைக்காமல் ஆர்வத்தோடு பள்ளிக்கு வரும் வகையில் நம்ம கல்விமுறையை மாற்றணும். கொடுமை பாருங்க. நான் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தயாராகும்போது படிச்சதெல்லாம் ஏற்கனவே பள்ளியில் படிச்சதா தானிருக்கு. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை வேறு வேறு வடிவங்களில் படிச்சிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. ஒருவன் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த வயதுக்கு தேவையான வாழ்க்கைக்கல்வி இன்றைய சூழலில் அவசியம்! அப்புறம், சிவில் சர்வீஸ் எக்ஸாம்னாலே எல்லோரும் ஏதோ பெரிய பட்டப்படிப்பு மாதிரி பயப்படுறாங்க. இது ஒரு போட்டித்தேர்வு, பட்டப்படிப்பு அல்ல. பயமில்லாம நிறைய பேர் இந்த தேர்வுகளை எழுதணும். நம்ம இளைய தலைமுறை எதிர்ப்பார்க்கிற அட்வெஞ்சர் கேரியரா நிச்சயமா சிவில் சர்வீஸ் அமையும். ஆறாவது ஊதியப்பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்த்துக்கு அப்புறமா நல்ல சம்பளமும் கிடைக்குதுங்க!” என்கிறார். கற்றல் தொடர்பான டிஸ்லெக்சியா பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட வென்றுவிட்டேன் என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.
.
“அதிருக்கட்டும் சார், உங்களைப் பார்த்து படிப்பை பாதியில் விட்ட உங்க தங்கைகள், தம்பி என்ன ஆனாங்க?” என்று கேட்டால், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். .
“சொன்னா நிச்சயமா நம்பமாட்டீங்க. நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ன்னு அவங்களும் என்னை பின் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்கன்னா உங்களால நம்ப முடியுதா?”
“அதிருக்கட்டும் சார், உங்களைப் பார்த்து படிப்பை பாதியில் விட்ட உங்க தங்கைகள், தம்பி என்ன ஆனாங்க?” என்று கேட்டால், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். .
“சொன்னா நிச்சயமா நம்பமாட்டீங்க. நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ன்னு அவங்களும் என்னை பின் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்கன்னா உங்களால நம்ப முடியுதா?”
.
படிப்பை பாதியில் நாலுபேரும் அடுத்தடுத்து விட்டதை கூட நம்பிவிடலாம். மீண்டும் தன்னெழுச்சியாக படித்து நல்ல நிலைக்கு சொல்லிவைத்தாற்போல நான்கு பேருமே உயர்ந்திருப்பது என்பது கொஞ்சம் சினிமாத்தனமாக தெரிந்தாலும், நந்தகுமாரின் குடும்பத்தில் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கல்வி அடிப்படையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான குடும்பம் இன்று, அதே கல்வியாலேயே தலைநிமிர்ந்து வாழ்வது மகிழ்ச்சியான விஷயம்தான் இல்லையா?
படிப்பை பாதியில் நாலுபேரும் அடுத்தடுத்து விட்டதை கூட நம்பிவிடலாம். மீண்டும் தன்னெழுச்சியாக படித்து நல்ல நிலைக்கு சொல்லிவைத்தாற்போல நான்கு பேருமே உயர்ந்திருப்பது என்பது கொஞ்சம் சினிமாத்தனமாக தெரிந்தாலும், நந்தகுமாரின் குடும்பத்தில் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கல்வி அடிப்படையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான குடும்பம் இன்று, அதே கல்வியாலேயே தலைநிமிர்ந்து வாழ்வது மகிழ்ச்சியான விஷயம்தான் இல்லையா?
.
நன்றி : புதிய தலைமுறை
.
=========================================
கல்வியின் வேர்கள் கசப்பானவை,
கல்வியின் வேர்கள் கசப்பானவை,
ஆனால்
அதன் கனிகளோ மிக இனிப்பானவை..!
========================================
Sunday, February 07, 2010
FOUR THINGS ....

The Holy Prophet Mohammed (SAL) narrated as follows :-
.
Four things that make your body sick:
a) Excessive talking
b) Excessive sleeping
c) Excessive eating and
d) Excessive meeting other people
.
Four things that destroys the body:
a) Worrying
b) Sorrow (Sadness/Grief)
c) Hunger
d) Sleeping late in the night
.
Four things that dry the face & take away its happiness:
a) Lying
b) Being disrespectful / impudent (insisting on something wrong knowingly)
c) Arguing without adequate knowledge & Information.
d) Excessive immorality (doing something wrong without fear).
.
Four things that increases the wetness of face & its happiness:
a) Piety
b) Loyalty
c) Generosity (being kind)
d) To be helpful to others without he/she asking for that.
.
Four things that stop the Rizq (Sustenance)
a) Sleeping in the morning (from Fajr to sunrise)
b) Not Performing Namaz or Ir-regular in Prayers
c) Laziness / Idleness
d) Treachery / Dishonesty
.
Four things that bring / increase the Rizq:
a) Staying up in the night for prayers.
b) Excessive Repentance
c) Regular Charity
d) Zikr (Remembrance of Allah / God).
.
Do Remember this Powerful Dua'a for Better Life :
.
"Allahumma- Inni- Ala- Zikr-ika -Wa-Shuk-rika Wa-Husni-Ibaadatik".
Thursday, February 04, 2010
READ & HELP

Hi Readers,
.
If you know anyone who has met with a fire accident or people who are born with physical problems or disabilities such as jointed ear, nose and mouth, please note they can avail free plastic surgery at Pasam Hospital - KODAIKANAL from March 23rd to 4th April 2010 by German Doctors will be treated those patients on free of cost.
.
Contact Nos. +91 (0)4542 - 240668 / 245732
Contact Nos. +91 (0)4542 - 240668 / 245732
.
Heart Surgery on Free oCost for Children between 0 and 10.
Shri Satya Sai Institute, Banglore – Ph : 080 28411500
.
Please inform to your circles....!
.
Someone will be benefited somewhere by your efforts.
.
GOD BE WITH YOU & YOU WILL BE REWARDED BY GOD.
Subscribe to:
Posts (Atom)





















